அழுகிய மீனா? அழகான மீனா?

மத்தேயு 13:47-53

இந்த அவனியில் பிறந்த அனைவரும் கடவுள் கொடுத்த மிக உயா்ந்த பரிசான வாழ்க்கையை வைத்து மிக சிறப்பான பணிகளை செய்ய வேண்டும் என்பதே நம் கடவுளின் எதிர்பார்ப்பு. மிகவும் உயரே பறப்பதற்கான அனைத்து ஆற்றலும், அருளும், ஆசீர்வாதமும் எல்லாம் வல்ல கடவுள் ஒவ்வொரு மாந்தருக்கும் நிறைவாகவே பொழிந்திருக்கிறார். ஆகவே கடவுளைப் போலவே நாம் சக்திமிக்கவர்களாக மாற முடியும். நடக்கும் இடமெல்லாம் நன்மையை செய்ய முடியும். அதிசயங்களை அனுதினமும் செய்ய முடியும். ஆனால் நடைமுயைில் இவைகள் ஏன் நடப்பதில்லை? ஏன் நம்மால் மாறமுடியவில்லை?

மேலே நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதாய் வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். காரணம் இரண்டு வகையான மீன்களாக மனிதர்கள் வலம் வருகிறார்கள். ஒன்று அழுகிய மீன்கள் மற்றொன்ற அழகான மீன்கள்.

அழுகிய மீன்கள் தங்கள் வாழ்வின் பொறுப்பை மறந்து கடமைகளை செய்யாமல் தண்ணீர் போகின்ற போக்கிலே அவர்களும் செல்வதால் அதாவது உலகின் போக்கிலே அவர்கள் கடந்து செல்வதால் தங்கள் வாழ்க்கையால் கடவுளுக்கு பலன் கொடுக்காமல் அழுகிய மீன்களாகவே நாற்றமெடுக்கின்றனர்.

அழகிய மீன்கள் வகையில் வருகின்றவர்கள் தங்கள் பிறப்பின் அவசியத்தை அறிந்திருப்பதால் அதிவேகமாக செயல்படுகிறார்கள். ஆற்றல் அனைத்தையும் அரவணைத்து அற்புதமான செயல்களை செய்கிறார்கள். ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற அதிசயமணி அவர்களுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

மனதில் கேட்க…
• அழுகிய மீன் வகையில் நான் இருக்கிறேனா?
• கடவுள் கொடுத்த வாழ்க்கையை வெறுமையாக்கியது சரியா?

மனதில் பதிக்க…
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர் (திபா 128:2)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.