ஆண்டவரே! உமது ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்

திருப்பாடல் 119: 53 & 61, 134 & 150, 155 & 158

திருச்சட்டத்தின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கிற ஒரு மனிதரின் பாடல் தான் இன்றைய திருப்பாடல். திருச்சட்டம் என்பது இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய சட்டம். இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய வாழ்வை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒழுங்குமுறைகளின் தொகுப்பு தான் திருச்சட்டம். இந்த சட்டத்தை அனைத்து இஸ்ரயேல் மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். அதனைப்பற்றிய சிந்தனையைத் தருவதுதான் திருப்பாடல் ஆசிரியரின் நோக்கமாக இருக்கிறது.

திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்போருக்கு ஏற்படும் துன்பங்களையும் இந்த திருப்பாடல் கோடிட்டுக் காட்டுகிறது. திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், அதே வேளையில் அதனை துன்பங்களுக்கு மத்தியில் கடைப்பிடிப்போருக்கு வரும் இடர்களும் சாதாரணமானவை அல்ல. அது மிகவும் கடினமானது. அதனை நாம் எதிர்கொள்வது கடினம் என்றாலும், இறைவல்லமையில் நாம் நம்பிக்கை வைத்து முன்னேறுகிறபோது, அது நிச்சயம் சாத்தியமாகவே இருக்கும். அந்த நம்பிக்கையை இந்த திருப்பாடலில் பார்க்கிறோம். கண்டிப்பாக எல்லாருக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிவுக்கு வரும். அது வருகிறநாளில் மீட்பும் அவர்களுக்கு வரும்.

நம்முடைய வாழ்வில் நாம் திருச்சட்டத்தை, கடவுளின் அன்புச்சட்டத்தை கடைப்பிடிக்க நாம் எடுக்கிற முயற்சி என்ன? எப்படி கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடித்து அவரோடு உறவு நிலையில் நாம் வாழ்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்து, அதற்கேற்றாற்போல, நம்முடைய வாழ்க்கைமுறையை நாம் அமைத்துக்கொள்வோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.