இகழ்ச்சி இன்றிலிருந்து இருக்காது…

டிசம்பர் – 19
லூக்கா 1:5-25

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

செக்கரியா – எலிசபெத்து தம்பதியினர் பிள்ளை இல்லாமல் மிகவும் இகழ்ச்சிக்குள்ளாயிருந்தனர். அக்கம் பக்கத்தார் அவர்களை அதிகம் வார்த்தைகளால் குத்தினர். அவர்கள் மனம் பாரமாக இருந்தது. அந்த பாரத்தை, அந்த இகழ்ச்சியை ஆண்டவர் நீக்குவதை இன்றைய நற்செய்தி வாசகம் நம் கண்முன் வைக்கிறது. அவர்களின் இகழ்ச்சியை நீக்கிய ஆண்டவர் நம் இகழ்ச்சியையும் நீக்குவார் என்ற ஆசீர்வாதத்தையும் வழங்குகிறது இன்றைய வழிபாடு. அதற்காக நாம் மனதில் நிறுத்த வேண்டிவைகள் இரண்டு:

1. கடவுள் மறப்பதில்லை
பல நாட்கள் கடந்திருக்கலாம். ஆனால் நாம் கேட்டது கண்டிப்பாக நடக்கும். நாட்கள் கடந்துபோய்க்கொண்டிருக்கிறதே கிடைக்குமா? என்று நினைக்க வேண்டியதில்லை. செக்கரியா – எலிசபெத்து தம்பதியனர் ஏற்கனெவே வேண்டியது, ஆனால் அவர்களுக்கு கிடைத்தது. கடவுள் மகிழ்ச்சியால் அவர்களை வழிநடத்தி விட்டார். நமக்கும் இது நடக்குமே!

2. கடவுள் அனுமதிப்பதில்லை
கடவுள் அவரின் பிள்ளைகள் இகழ்ச்சியோடு வாடி வதங்க வேண்டும் என்று ஒருபோதும் நினைப்பதில்லை. இகழ்ச்சியை நீக்கி கடவுள் மகிழ்ச்சியை கொடுக்கவே நினைக்கிறார். ஆகவே நமக்குள் இருக்கும் அவநம்பிக்கையை எடுத்துவிட்டு அவரின் கரத்தை உறுதியாக பிடிக்க நாம் பயிற்சி எடுக்க வேண்டும்.

மனதில் கேட்க…
1. என் இகழ்ச்சியின் நேரத்தில் நான் கடவுளை நம்புகிறேனா?
2. கடவுள் இன்று என் இகழ்ச்சியை போக்குவார் நான் இதை நம்புகிறேனா?

மனதில் பதிக்க…
மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார் (லூக் 1:25)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.