இன்பமும், துன்பமும்

துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த உண்மையை அறிந்து, ஏற்று வாழ்ந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே. இன்பம் வரும்போது மகிழ்வதும், துன்பம் வரும்போது வாழ்வை வெறுப்பதும், வாழ்வைப்பற்றிய சரியான பார்வை அல்ல. இன்பமோ, துன்பமோ வாழ்வில் எப்போதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த சிந்தனை தான், இன்றைய நற்செய்தி வாயிலாக நமக்குத்தரப்படுகிறது.

வாழ்க்கை என்பது சுழலும் சக்கரம். எப்போதும் ஒரே போல இருக்காது. யோவான் சிறையில் இருக்கிறார். அவரின் சீடர்களுக்கு இப்போது துன்பமான நேரம். ஆனால், இந்த துன்பமும் நிரந்தரமல்ல. காலம் மாறும். இந்த துன்பமும் நீங்கும். அதேபோல இயேசுவின் சீடர்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். காரணம், இயேசு அவர்களோடு இருக்கிறார். அவர்கள் துன்பத்தை சந்திக்கும் காலம் வரும். துன்பம் வரும் என்பதற்காக, இப்போதுள்ள இன்பமான நேரத்தை கவலையில் மூழ்கடிக்கக்கூடாது. மகிழ்ச்சியான நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

துன்பம் என்பது நமக்கு வாழ்வில் பல பாடங்களைக் கற்றுத்தரக்கூடியது. துன்பத்தை நேர்மறையான பார்வையோடு அணுகினால், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அனுபவங்கள் ஏராளமானதாக இருக்கும். துன்பத்தைக்கண்டு துவண்டுவிடாமல், கடவுள் மட்டில் நம்பிக்கை கொண்டு, துணிவோடு வாழ்வை வாழ்வோம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.