இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா

நோ்ந்தளியுங்கள்… நேராகுங்கள்
யோவான் 2:13-22

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருவிழா திருப்பலி நம்மை கடவுளுக்கு நேர்ந்தளிக்க அழைப்பு கொடுக்கிறது. நாம் அனைவரும் கடவுளுக்கே சொந்தம் என்பதை ஆலயத்தில் அறிக்கையிட வேண்டும். உரக்க அதை வெளியிட வேண்டும். அதற்கான வாய்ப்பாக இந்த நாளை பயன்படுத்துவோம். இன்று ஆலயம் வந்திருக்கின்ற நாம் அதை முழு ஆர்வத்தோடும் ஆசையோடும் செய்வோம். அதுதான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஆலயத்தில் நேர்ந்தளிக்க வேண்டும். அப்படி ஆலயத்திற்கு நம்மை நேர்ந்தளிக்கும் போது இரண்டு விதங்களில் நாம் பயன் பெறுகிறோம்.

1. பாதுகாப்பு பெறும் வளையம் உருவாகிறது
நாம் ஆண்டவருக்கு ஆலயத்தில் வைத்து நம்மை நேர்ந்தளிக்கும் போது பாதுகாப்பு வளையம் நம்மைச் சுற்றி உருவாகிறது. அந்த பாதுகாப்பு வளையம் நம்மை அனைத்து தீமையிலிந்தும் விடுவிக்கிறது. அவசியமற்ற ஆசைகள் அந்த வளையத்துக்குள் வருவதில்லை. பாதுகாப்பு வளையத்திற்குள் நாம் 24 மணிநேரமும் பத்திரமாக இருப்போம்.

2. பாதுகாப்பு கொடுக்கும் வளையம் உருவாகிறது
ஆலயத்தில் நேர்ந்தளிக்ப்பட்ட நான் பிறருக்கு பாதுகாப்பு கொடுக்கும் வளையமாக மாறுகிறேன். என் குடும்பத்திற்கு நான் பாதுகாப்பாக மாறுகிறேன். நான் எங்கிருந்தாலும் என் அருகிலிருப்பவர்களை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து நான் பத்திரமாக நான் பாதுகாக்கின்றேன்.

மனதில் கேட்க…
1. என்னை ஆண்டவருக்கு நான் நேர்ந்தளித்திருக்கிறேனா?
2. நான் பிறருக்கு கெடுதல் செய்யாமல் நன்மை செய்யும் பாதுகாப்பு வளையமாக மாறலாம் அல்லவா?

மனதில் பதிக்க…
நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? (1கொரி 3:16)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.