தூக்க மயக்கம் உங்களைத் தின்றுவிடும்

மத்தேயு 25:1-13

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

அன்புமிக்கவர்களே! வாழ்க்கையை கொண்டாடுங்கள். சந்தோசமாக மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள். இந்த வசனங்களை நாம் கேட்டிருக்கிறோம். யார் வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள்?. யார் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்?. நல்ல சுறுசுறுப்பாக அனுதின கடமைகளை செய்பவர்கள், கடமைகளை தள்ளிப் போடாமல் கருத்துடன் செய்வர்கள் தான் வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

பலருடைய வாழ்க்கை கொண்டாட்டம் இல்லாமல் திண்டாட்டமாகவே ஓடுகிறதே காரணம் என்ன? அதற்கான இரண்டு காரணங்களை இன்றைய நற்செய்தி வாசகம் நம் கண்முன்னே வைக்கின்றது.

1. ஆர்வமற்றவர்கள்
அன்றன்றுள்ள கடமைகளை அன்றே செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவர்கள் இன்பமாய் இருப்பதில்லை. அடுத்த நாளைக்கு தள்ளிப்போடுகிறார்கள். அடுத்த நாள் செய்ய முடிவதில்லை. குற்றயுணர்வு வருகிறது. வாழ்வு கசப்பாகிறது.

2. அடிமைகள்
ஆட்களுக்கு, பொருட்களுக்கு அடிமைகளாக இருக்கின்றவர்கள் எப்போதும் தூக்க மயக்கத்துடன் அழைவர். அசதி அவர்களை ஆட்கொள்ளும். சோர்வு ஒரு திமிங்கலம் போல அவர்களை விழுங்கும். வாழ்வே மாயமாக மாறிவிடும்.

மனதில் கேட்க…
1. என் வாழ்க்கை எனக்கு கொண்டாட்டாமா அல்லது திண்டாட்டமா?
2. இப்போது இருப்பதை விட இன்னும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் நான் செயல்படலாமே?

மனதில் பதிக்க…
விழிப்பாயிருங்கள், ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையே உங்களுக்குத் தெரியாது(மத் 25:13)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.