தேவையில் இருக்கிறவர்கள்

”சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர், என்னையே ஏற்றுக்கொள்கிறார்” என்று இயேசு சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன? இயேசு சிறுபிள்ளைகளை உவமையாக எதற்கு ஒப்பிடுகிறார்? எந்த பெற்றோரும், தனது பிள்ளைகளை சுமையாக நிச்சயம் கருதமாட்டார். அவர்களை ஏற்றுக்கொள்வது யாருக்கும் கடினமானது அல்ல. எனவே, குழந்தைகளை ஏற்றுக்கொள்வதைப்பற்றி இயேசு இங்கே பேசவில்லை. குழந்தைகளை உவமையாகப் பயன்படுத்துகிறார். அப்படியென்றால், குழந்தைகளை, இயேசு யாருக்கு ஒப்பிடுகிறார்?

இங்கே குழந்தைகள் என்று வருகிற வார்த்தையை, நாம் புரிந்து கொள்ளும் சிந்தனை, சிறுகுழந்தைகள் யாருக்கும் எதுவும் கொடுக்க முடியாது. அவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து இருப்பார்கள். குழந்தைகளின் பெற்றோர், அவர்களுக்கு தேவையானவற்றை பார்த்து, பார்த்து செய்கிறார்கள். குழந்தைகள் மற்றவர்களின் உதவியில் தான், வாழ்கிறார்கள். அந்த குழந்தைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவர்களை அன்பு செய்கிறோம். அது போலவே, தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத, ஏழை, எளியவர்களை, வறியவர்களை இயேசு குழந்தைகளுக்கு ஒப்பிடுகிறார்கள். அவர்களை நாம் ஏற்றுக்கொள்ள பணிக்கிறார். தேவையில் இருப்பவர்களை ஏற்றுக்கொள்வது, இயேசுவையே ஏற்றுக்கொள்வதைப்போல ஆகும்.

இன்றைய உலகில் மக்கள் தெய்வங்களுக்கு கொடுக்கும் உதவியை, நடமாடும் தெய்வங்களாக இருக்கக்கூடிய மனிதர்களுக்கு, ஏழை, எளியவர்களுக்கு கொடுக்க மனமில்லாமல் இருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? மக்களை நாம் பயிற்றுவிக்கவில்லையா? வழிபாடுகள் அவர்களை முறையாக வாழ்வதற்கு கற்று தரவில்லையா? சிந்திப்போம். அதற்கேற்றவாறு செயல்படுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.