நம்பிக்கையை அதிகமாக்கும்….

மாற்கு 9 : 14 – 21

இன்றைய நற்செய்தி நம் இறைநம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக அமைந்திருக்கின்றது. இச்சிறுவனைப் பிடித்துள்ள பேய் ஆற்றல் உள்ளது. அது அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரை தள்ளிப் பல்லைக் கடிக்கிறான். அவனது உடலும் விறைத்துப் போகின்றது. இப்பேயின் ஆற்றலின் முன் சீடர்களின் ஆற்றல் குறைவாகவே இருக்கின்றது. இக்குறைவிற்கு காரணம் என்ன? என்றும், இந்த சிறுவனை எப்படி நிறைவாக்க முடியும்? என்றும் ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்துகிறார். இன்றைய சீடர்களாகிய நமக்கு இது எப்படி முக்கியம் என்றால் நாம் பிறருக்கு பிடித்திருக்கின்ற தீய சக்திகளை விரட்டுவதைக் காட்டிலும் நம்மிடம் நம்மைச் சார்ந்து இருக்கின்ற தீய சக்திகளை விரட்டியடிக்க வேண்டும்.

“என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் என்னைவிடப் பெரிய காரியங்களைச் செய்வார்” ( யோவான் 14:12) என்ற இறை வார்த்தையை முதலில் நம்ப வேண்டும். நம்பிக்கை என்பது, ‘என்னால் இயலாது, இறைவா’ உம்மால் மட்டுமே எல்லாம் இயலும் என்று அவரது ஆற்றலை ஏற்றுக் குழந்தையைப்போல் அவரிடம் சரணாகதி அடைவதே! இந்த நம்பிக்கையை அதிகப்படுத்த இன்றைய நற்செய்தியில் வருகின்ற சிறுவனின் தந்தையைப் போல நாமும் தொடர்ந்து சொல்ல வேண்டும். ‘நான் நம்புகிறேன், என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்’. இச்சொல்லினை செயலாக்க வேண்டும். நம் நம்பிக்கை இன்னும் அதிகமாக ஆண்டவர் கொடுக்கின்ற “வுipள” நோன்பிருந்து செபிப்பது. எப்படி தந்தையோடு இரவுபகலாக இயேசு மன்றாடினாரோ, உறவு கொண்டிருந்தாரோ அதனைப்போலவே நாமும் இறைவனோடு உறவு கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு திருப்பலியிலும் இறைவன் நம் உடலுக்குள் தன் உடலோடு வருகிறார். ஆனால் நாம் அவரை பெற்றும் பெறாதவர்களாக அவருடைய வார்த்தைகளைத் தினமும் கேட்டும் கேட்காத செவிடர்களாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட அனைத்தையும் பயன்படுத்தி பிறரோடு அன்பினை அவரின் வார்த்தையின் மூலமாகவும், உடலின் மூலமாகவும் பகிர்ந்து கொள்வோம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.