நீங்கள் என் சாட்சிகள்

”இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்” என்று சீடர்கள் இயேசுவிடத்தில் சொல்கிறார்கள். இதுவரை இயேசுவை நம்பாதவர்கள் எப்படி திடீரென ”நம்புகிறோம்” என்று பதில் சொல்கிறார்கள் என்பது நமக்கு சற்று வியப்பாக இருக்கிறது. எதனால் சீடர்கள் இயேசுவை நம்பினர்? என்ற கேள்வியும் நமக்குள்ளாக எழுகிறது.

யோவான் நற்செய்தி 16: 16 மற்றும் 17வது இறைவார்த்தைகளில் சீடர்கள் குழம்பிப்போயிருப்பதை நாம் வாசிக்கிறோம். ”அவர் பேசுவது நமக்குப்புரியவில்லையே” என்றும் தங்களிடையே பேசிக்கொள்கின்றனர். ஆனால், 19 வது இறைவார்த்தையில், இயேசு ”இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் சிறிதுகாலத்தில் என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைப்பற்றி உங்களிடையே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று, அவர்கள் உள்ளத்தில் எண்ணியதை வெளிப்படையாக இயேசு சொன்னபோது, அவருடைய உள்ளத்தையும் ஊடுருவி அறியும் சிந்தனையைப்பார்த்தவுடன், இயேசுவிடத்தில் அவர்களின் நம்பிக்கை உறுதியாகிவிட்டது.

இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொள்வதற்கு பல விசுவாசத்தின் சாட்சியங்கள் நம்மிடையே இருக்கிறது. ஆண்டவரின் வார்த்தை, சாட்சிய வாழ்வு வாழும் கிறிஸ்தவர்கள், புதுமைகள் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. இந்த விசுவாச சாட்சியங்கள் நமது விசுவாசத்தை தட்டி எழுப்பட்டும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.