நீதியின் கடவுள்

எசாயா 42: 1 – 4 பகுதியிலிருந்து, மத்தேயு இயேசுவின் பணிவாழ்வை ஒப்பிடுகிறார். பழைய ஏற்பாட்டில், முதலில் இது பாரசீக அரசர் சைரசுக்கு ஒப்பிடப்படுகிறது. சைரஸ் தொடர்ந்து நாடுகளை வெற்றி பெற்றுக்கொண்டிருந்தார். அவருடைய வெற்றியை கடவுளின் திட்டமாகவே இறைவாக்கினர் எசாயா பார்த்தார். சைரஸ் அறியாமலேயே, கடவுள் அவரைப்பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று அவர் நினைத்தார். இந்தப் பகுதி சைரஸ் அரசரைப்பற்றி எழுதப்பட்டதாக இருந்தரலும், இயேசுவுக்கான, இயேசுவின் பணிக்கான இறைவாக்காகவே இது பார்க்கப்படுகிறது.

சைரஸ் குறிப்பிட்ட பகுதிகளை வெற்றி கொண்டார். இயேசுவோ இந்த அவனி முழுவதையும் வெற்றிகொண்ட வெற்றி வீரராக மதிக்கப்படுகிறார். இயேசுவின் முக்கியப்பணியாக இறைவாக்காகக் கூறப்படுவது, நீதியை அறிவிப்பது. நீதி என்கிற கிரேக்க வார்த்தையின் பொருள்: கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும், மக்களுக்குரியதை மக்களுக்கும் கொடுப்பது. இயேசு கடவுளுக்குரியதை கடவுளுக்கும், மக்களுக்கானதை மக்களுக்கும் கொடுப்பதற்காகவே வந்தார். எனவே தான், தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியது கிடைக்காமல் வாழ்ந்த, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை உயர்வுக்காக, அவர்கள் சார்பாக இயேசு பேசினார்.

நமது வாழ்வில் நீதி உள்ளவர்களாக, நமது வாழ்வை அமைத்துக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். நீதியின் பாதையில் நாம் நடந்து, மக்களை வழிநடத்துவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் திட்டம் இந்த மண்ணில் நிறைவேற நாம் முழுமையாக உடன்படுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.