நேர்மையாளரையும், பொல்லாரையும் ஆண்டவர் சோதித்தறிகிறார்

ஒருவரை நல்லவரா? கெட்டவரா? என்று அறிவதற்கு, சோதனை செய்து பார்ப்பது மனிதர்களின் குணம். மிகப்பெரிய பொறுப்பை ஒருவரிடம் கொடுக்க விரும்பும் தலைவர், யாரிடத்தில் அதனைக் கொடுக்க விரும்புகிறாரோ, அவரை பலமுறை சோதித்திருப்பார். அந்த சோதனையில் எல்லாம், அவர் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே, அவரால் மிகப்பெரிய பொறுப்பை அவரிடம் கொடுக்கலாம் என்கிற எண்ணம் வருவதாக இருக்கும். இது மனிதர்களுக்குப் பொருந்தும் ஆனால், கடவுள் ஒருவரைச் சோதித்துப்பார்த்துதான் அறிந்து கொள்ள முடியுமா? அல்லது சோதித்து தான் அறிந்து கொள்ள வேண்டுமா?

கடவுள் நேர்மையாளர்களையும், பொல்லாரையும் சோதித்து அறிகிறார் என்று திருப்பாடல் (திருப்பாடல் 11: 4, 5, 7) ஆசிரியர் சொல்கிறார். கடவுளுக்கு ஒருவரை யாரென்று தெரிய, சோதித்து அறிய வேண்டியதில்லை. அப்படியென்றால், எதற்காக கடவுள் சோதித்தறிகிறார்? என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்? கடவுள் அறிய வேண்டும் என்பதைவிட, மற்றவர்கள் ஒருவரை நேர்மையாளர் அல்லது பொல்லார் என்பதை அறிய வேண்டும் என்பதற்காக, கடவுள் அவர்களைச் சோதிக்கிறார். இதன் வழியாக, தன்னுடைய வல்லமையை நிலைநாட்டுகிறார். இங்கு கடவுளைப்பற்றிய வல்லமையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் நோக்கம்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் நேர்மையாளர்களாக இருக்கிறோமா? பொல்லாராக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? எப்போதுமே, கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்க்கையை வாழ, கடவுளிடம் மன்றாட, இந்த திருப்பாடல்(திருப்பாடல் 11: 4, 5, 7) விடுக்கும் அழைப்பினை ஏற்று, நமது வாழ்வை வாழ்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.