மண்ணகம் – இறைவனின் பிரசன்னம்

உலகம் என்பது கடவுளின் படைப்பு மட்டுமல்ல, கடவுளின் பிரசன்னம் முழுவதும் நிரம்பியிருக்கக்கூடிய இடம். இந்த உண்மையை இயேசு தனது போதனையின் வாயிலாக எல்லா இடங்களிலும் வெளிப்படுத்துகிறார். இயேசுவின் போதனை, அறிவுப்பூர்வமாக, அறிவில் சிறந்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ளக்கூடியது அல்ல. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துச்சிந்தனைகள் நிறைந்ததாக இருந்தது.

இன்றைய நற்செய்தியில் விதைகளை வைத்து இயேசு அருமையானச் செய்தியைத் தருகிறார். பொதுவாக, விண்ணகத்தை, பூமியோடு ஒப்பிடுகிறபோது, மண்ணகம் ஒன்றுமே இல்லாததுபோல, மண்ணகத்தை வெறும் ஒரு படைப்பு போல பார்க்கக்கூடிய நிலை, நம்மிடமே உள்ளது. ஆனால், இயேசுவின் போதனையில் உள்ள கருத்துக்களைப்பார்த்தால், எந்த அளவுக்கு மண்ணகம் கடவுளின் பிரசன்னத்தால் நிறைந்துள்ளது என்பதும், மண்ணகம் கடவுளின் வெறும் படைப்பு மட்டுமல்ல, அது இறைவன் வாழும் ஆலயம் என்பதும் நமக்குப்புலப்படும்.

இன்றைக்கு கடவுளின் படைப்பான இந்த பூமி, சிலபேரின் சுயநலத்திற்காக சிதைக்கப்படுவது கொடுமையானது. இந்த பூமி, இறைவனின் பிரசன்னம் தாங்கிய இடம் என்றால், அதை சிதைப்பது, நம்மையே சிதைப்பது போலாகும். இறைவனை இழிவுபடுத்துவதாகும். இந்த பூமியின் மீது நமக்கென்று தனிப்பாசம் வளர்ப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.