மதலேன் மரியா- அன்புக்கு ஓர் அடையாளம்

இன்று புனித மதலேன் மரியாவின் விழாவைக் கொண்டாடுகிறோம். புதிய ஏற்பாட்டில் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்காத ஒரு புனிதை இவர். ஆனால், இவர்தான் இயேசுவோடு மிக நெருக்கமான அன்புறவு கொண்டிருந்தவர் என்பதற்கு நற்செய்தி நூல்கள் பல சான்றுகளை வழங்குகின்றன. குறிப்பாக, இயேசுவின் இறப்பின் வேளையில் அவரது ஆண் சீடர்கள் அனைவரும் ஓடிவிட, சிலுவையடியில் நின்றுகொண்டிருந்த துணிவு மிக்க பெண்களில் இவரும் ஒருவர். இயேசுவைக் கல்லறையில் வைத்தபிறகும்கூட, ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் இருள்நீங்கும் முன்பே மரியா இயேசுவின் கல்லறைக்குச் சென்றார் என்று நாம் வாசிக்கும்போது நாம் வியப்படைகிறோம். ஆம், “அன்பில் அச்சமில்லைâ€? என்று புனித யோவான் தம் திருமடலில் எழுதினாரே (1 யோவா 4:18), அந்த அன்புக்கு இலக்கணம் மதலேன் மரியா. “அன்புக்கு என்றும் முடிவிராதுâ€? (1 கொரி 13:10) என்று பவுலடியார் மொழிந்தாரே, அந்த அன்புக்கு அடையாளம் மகதலேன் மரியா. இறந்தபின்னும் அன்பு வாழும் என்பதை எண்பித்தவர் மகதலா மரியா. இப்புனிதையிடமிருந்து இயேசுவை அன்பு செய்வதை மட்டுமல்ல, நம் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களையும் எப்படி அன்பு செய்வது என்று கற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்: எங்களின் இதயங்களின் ஏக்கமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். மகதலா மரியா என்னும் புனிதைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். நாங்களும் உம்மை எங்கள் முழு மனதோடும், முழு இதயத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்ய அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

— அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.