அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்!

இந்த குருக்களின் ஆண்டில் குருக்களுக்காக மட்டுமல்ல, இறை அழைத்தலுக்காகவும் மன்றாட நாம் கடமைப்பட்டிருக்கிறோம். திருச்சபை ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தமது மீட்பரி;ன் பணி என்னும் சுற்றுமடலில் மூன்று விதமான நற்செய்தி அறிவிப்புப் பணிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 1.நற்செய்தி அறிவிக்கப்படாத இடங்களில் நற்செய்தி புதிதாக அறிவித்தல். 2. ஏற்கனவே நற்செய்தி அறிவிக்கப்பட்ட விசுவாசத்தைப் பெற்ற மக்கள் அந்த விசுவாசத்தை இழந்து வாழும் இடங்களில் மறுநற்செய்தி அறிவித்தல். ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்த நிலையில்தான் இன்று இருக்கின்றன. ஒருகாலத்தில் ஆசிய நாடுகளுக்கு மறைரப்பாளர்களை அனுப்பிய ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இன்று புதிதாக நற்செய்தி அறிவிக்க வேண்டிய தேவை உள்ளது. பிற நாடுகளிலும் விசுவாசத்தை இழந்துகொண்டிருக்கிற மக்கள் ஏராளம் இருக்கின்றார்கள். அவர்களை வென்றெடுக்க வேண்டும். 3. கிறித்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்து வாழ்வோரை உறுதிப்படுத்தும் மேய்ப்புப் பணி. இன்றைய நுகர்வுக் கலாசார வெறியும், பெந்தகோஸ்து சபைகளும் விரிக்கின்ற வலையில் விழுந்துவிடாமல், இவர்களைக் காக்க வேண்டும்.

இந்த மூன்று விதமான நற்செய்தி அறிவிப்புப் பணிகளும் இன்றைய அவசியத் தேவைகளாக இருக்கின்றன. இவற்றைச் செய்வதற்கு ஏராளமான முழு நேர மற்றும் பகுதி நேர உழைப்பாளர்கள் தேவை. இவர்களைத் தரவேண்டும் என்று அறுவடையின் ஆண்டவரை நோக்கி மன்றாடுவோமா?

மன்றாடுவோம்: அறுவடையின் நாயகனே இறைவா, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய சவால்களைச் சந்திக்கும் அளவுக்கு எங்களுக்கு ஆர்வமும், அர்ப்பணமும் நிறைந்த ஊழியர்களை வழங்குவீராக. அறுவடை மிகுதியாகவும். வேலையாள்கள் குறைவாகவும் இருப்பதால், எங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்த இன்னும் ஆர்வம் மிக்க ஊழியர்களை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

— அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.