இயேசு அனுபவம்

வேறு எந்த நற்செய்தியாளரும் எழுதாத வகையில், லூக்கா நற்செய்தியாளர் தனது நற்செய்தி நூலின் முகவுரையில், தன்னை அறிமுகப்படுத்துகிறார். ”நானும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆராய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை…”. மற்றவர்கள் எழுதிய நற்செய்தியை மட்டும் வைத்து, லூக்கா நற்செய்தியாளர் திருப்தியடையவில்லை. இயேசுவுடனான தன்னுடைய அனுபவத்தை மையமாக வைத்து, இந்த நற்செய்தியை எழுதுவதாக அவர் சொல்கிறார்.

உண்மையான நம்பிக்கை என்பது நேரடி அனுபவத்திலிருந்து பெறக்கூடியது. அது தனிப்பட்ட நபரின் நேரடி அனுபவம். இரண்டாம் தரமாக பெறுவது கிடையாது. தான் கேட்டதை உறுதி செய்தபிறகு எழுதினாலும், தனிப்பட்ட முறையில் அவரின் இயேசுவுடனான உறவின் அடிப்படையில், நற்செய்தியை எழுதுவதாக லூக்கா நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசுவினுடைய அன்பின் ஆழத்தை, தனிப்பட்ட முறையில் தான், நாம் அதிகமாக உணர முடியும். நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இயேசு அனுபவத்தைப் பெற, இந்த பகுதி நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இன்றைக்கு நாம், மற்றவரின் அனுபவத்தின் அடிப்படையில் இயேசுவைப்பின்பற்ற விரும்புவதுதான், நமக்கு விசுவாசத்தளர்ச்சியையும், உறுதியில்லாத தன்மையையும் ஏற்படுத்துகிறது. நமது விசுவாசம், நேரடி அனுபவத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள நாம் முயற்சி எடுப்போம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.