இரண்டு வார்த்தைகளால் உங்கள் நோயை குணப்படுத்தலாம்!

மத்தேயு 15:29-37

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

உடல்நோய், மனநோய் இந்த இரண்டினாலும் பாதிக்கப்பட்டவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை உண்டா? என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். உடல்நோய் மற்றும் மனநோயை நாமே குணப்படுத்த முடியும். திருவிவிலியத்திலுள்ள இரண்டு வார்த்தைளை நாம் பயன்படுத்தினால் நம் உள்மனக் காயங்கள், வெளிமனக் காயங்கள் மற்றும் அனைத்து நோய்களும் குணமாகுகின்றன. அந்த இரண்டு வார்த்தைகள் இதோ:

  • தாவீதின் மகனே இரங்கும்
  • ஏற்கெனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டவர் இயேசுவை நோக்கி ”தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” என மன்றாடும் போது அவர் அற்புத சுகம் அளிக்கிறார்
  • இந்த வார்த்தை கடவுளின் பேரிரக்கத்தை பெற்றுத் தருகிறது
  • கொடிய நோய்களுக்கு விடுதலை அளிக்கிறது.
  • உம்மால் மட்டுமே முடியும்
  • கடவுளினால் மட்டுமே எல்லாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இந்த வார்த்தை வெளிப்படுத்துகிறது
  • இயேசுவே உம்மால் மட்டுமே எனக்கு விடுதலை உண்டு என்ற வார்த்தை இந்த உயிரளிக்க வல்லது
  • ஆண்டவரின் சர்வ வல்லமை இங்கே எடுத்துரைக்கப்படுகிறது
  • இந்த வார்த்தையைச் சொல்லும் போதே நோயிலிருந்து விடுதலை பெற்ற உணர்வு உண்டாகும்

மனதில் கேட்க…

இந்த இரண்டு வார்த்தைகளை சொன்னாலே போதும் நோய் துரத்தாது – இனி சொல்லலாமா?
இந்த இரண்டு வார்த்தைகளை பிறருக்கு சொல்லி கொடுக்கலாமா?

மனதில் பதிக்க…
இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2:10)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.