உண்மையான உறவு

எந்த ஒரு மனிதரைப் பற்றி அறிய வரும்போது, மக்களிடையே எழக்கூடிய இயல்பான கேள்வி, இவருடைய குடும்பம் எது? இவர் பிறந்த ஊர் எது? போன்றவை. மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியை யூதர்களுக்கு எழுதுகிறார். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர் யூதர்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றால், அதற்கேற்றாற்போல, தன்னுடைய நற்செய்தியை அவர் எழுத வேண்டும். யூதர்களின் வாழ்வில் மையம் கொண்டிருக்கிற முக்கியமானவர்கள், இயேசுவுக்கு நெருக்கமாக இருந்தால், அதை வைத்து, அவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது எளிதானது. எனவே தான், மத்தேயு நற்செய்தியாளர் ஆபிரகாமை, நம் ஆண்டவர் இயேசுவுக்கு தொடக்கமாக தருகிறார்.

ஆபிரகாம் யார்? எதற்காக ஆபிரகாமை இயேசுவின் தொடக்கமாக மத்தேயு நற்செய்தியாளர் எழுத வேண்டும்? ஆபிரகாம் இஸ்ரயேல் மக்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர். மிகப்பெரிய இறைவாக்கினராகக் கருத்தப்பட்டவர். அவர் வழியாகத்தான் கடவுள் தங்களை தேர்ந்து கொண்டதாக மக்கள் நம்பினர். அதையே வழி, வழியாக ஏற்றுக்கொள்ளவும் செய்தனர். ஆபிரகாமுக்கு இணையானவராக அவர்கள் வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. அந்த அளவுக்கு ஆபிரகாம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் ஒன்றாக இணைந்திருந்தார். எனவே தான், இயேசுவை அவருடைய வழித்தோன்றலாக அறிவிப்பதன் மூலம், மக்கள் வெகு எளிதாக இயேசுவை ஏற்றுக்கொள்ள முடியும் என்று நம்பி, மூதாதையர் பட்டியலை அவர் எழுதுகிறார்.

நாம் அனைவருமே கடவுளின் பிள்ளைகளாகப் படைக்கப்பட்டிருக்கிறோம் நமக்குள் எப்போதும் இந்த எண்ணம் மேலோங்கியிருக்க வேண்டும். கடவுள் தான் நம் அனைவருக்கும் தந்தை. நாம் அவரின் பிள்ளைகள். அந்த எண்ணம் நமக்குள்ளாக இருந்தால், நிச்சயம் நம்மால் எல்லோரையும் அன்பு செய்து, நல்ல உறவோடு வாழ முடியும்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.