உலகைச் சார்ந்தவர்கள் அல்ல !

இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாக இயே நமக்குத் தரும் செய்தி: “நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல”. இயேசு உலகினரை இரு பிரிவினராகப் பிரிக்கவே வந்தார். இருளைச் சார்ந்தவர்கள், ஒளியைச் சார்ந்தவர்கள், இந்த உலகைச் சார்ந்தவர்கள், இவ்வுலகில் வாழ்ந்தாலும், விண்ணைச் சார்ந்தவர்கள். இயேசுவின் சீடர்கள் அனைவரும் இரண்டாம் பிரிவைச் சொந்தமாக்கிக்கொண்டவர்கள். நாம் இந்த உலகில் வாழ்ந்தாலும், நாம் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்லர். இவ்வுலகின் தலைவன் என அழைக்கப்படும் அலகையின் அடிமை அல்ல. மாறாக, விண்ணகமே நமக்குத் தாய்நாடு. நாம் இங்கே பயணிகள் மட்டுமே. நமது கால்கள் மண்ணில் இருந்தாலும், நமது கண்களும், இதயமும் விண்ணை நோக்கிய வண்ணமே இருக்கவேண்டும். நமது எண்ணங்கள் இவ்வுலக எண்ணங்கள் போல் இல்லாமல், நமது கவலைகளும் இவ்வுலகக் கவலைகளாக இருக்கக் கூடாது. நாம உயிர்ப்பின் மக்கள். ஆவியின் ஆற்றல் பெற்றவர்கள். எனவே, நமது வாழ்வின் தரத்தை உயர்த்திக்கொள்வோமாக.

மன்றாடுவோம்: எங்களின் ஆர்வமும், ஆற்றலுமான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். தந்தை இறைவனை நோக்கி எங்கள் இதயங்களை எழுப்பியருளும். எங்களது ஆர்வமும், ஏக்கமும் இவ்வுலகப் பொருள்கள்மீது இல்லாமல், நிலையான இன்பமான உம்மீதே இருப்பதாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

— அருட்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.