எதுக்கு சண்டை? எதுக்கு சச்சரவு?

மத்தேயு 12:14-21

கடவுள் படைத்த உலகம் சண்டையில்லா சத்தமில்லா சந்தோசமான உலகம். அவர் படைத்த அந்த உலகை நல்லது எனக் கண்டார். ஆனால் அவர் நல்லது எனக் கண்ட உலகம் இப்போது நல்லது என்று கூறும் தகுதியை இழந்து நிற்கின்றது. காரணம் என்ன? எங்கும் சண்டை. எங்குப் பார்த்தாலும் சத்தம். சந்தோசமில்லை சங்கடம் தான் அதிகம்.

சண்டையுடனும் சத்தத்துடனும் சந்தோசமில்லாமல் இருக்கும் இந்த உலகத்தில் மீண்டும் அமைதியை உருவாக்க ஒவ்வொருவரும் இயேசுவை பின்பற்ற வேண்டும் என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவைப் பற்றி நற்செய்தி வாசகம் ”இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார்” என அறிமுகம் செய்கிறது. இயேசுவைப் பின்பற்றி நாமும் சமாதானத்தை உருவாவோம். சச்சரவு இல்லாத சந்தோசமான உலகத்தை சமைப்போம்.

மனதில் கேட்க…

வாழும் குறுகிய காலத்தில் சண்டை எதற்கு?
என்னை விட்டு பிரிந்து போன உறவுளில் சமாதானத்தை கொண்டு வருவேன்?

மனதில் பதிக்க…
இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார். கூக்கிரலிடமாட்டார் (மத் 10:42)

-அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.