எல்லாவகை அச்சத்தினின்றும் ஆண்டவர் விடுவித்தார்

திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8

இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களுக்கு இயல்பாகவே அச்சம் என்பது உள்ளத்திலே இருக்கிறது. அந்த அச்சம் பலவிதமான காரணங்களுக்காக ஒருவருக்குள் எழலாம். இருளைப் பார்த்து ஒரு சிலர் பயப்படலாம். படிப்பைப் பார்த்து பயப்படலாம். பாம்பைப் பார்த்து பயப்படலாம். எதிர்காலத்தை நினைத்து அச்சம் கொள்ளலாம். மனிதர்கள் அச்சம் கொள்வதற்கு ஏராளமான காரியங்கள் இந்த உலகத்திலே இருக்கிறது. வாழ்க்கையில் எப்படிப்பட்ட அச்சம் இருந்தாலும், கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை, ஆண்டவர் அச்சத்தினின்று விடுவிக்கிறார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர் நிச்சயம் அச்சம் கொள்ளமாட்டார். ஏனென்றால், கடவுளின் பிரசன்னம் தன்னோடு இருப்பதாக அவர் உணர்கிறார். நெருக்கடி வேளையில் ஆண்டவர் கைதூக்கி விடுவார் என்கிற நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. எத்தகைய தீங்கு வந்தாலும், கடவுள் நிச்சயம் பாதுகாப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஏனென்றால், கடவுளை மிஞ்சி இந்த உலகத்தில் எதுவும் நடந்து விட முடியாது. நம்முடைய நம்பிக்கை இப்படிபட்ட நம்பிக்கையாக அமைய வேண்டும் என்பது தான், இந்த திருப்பாடல் நமக்கு விடுக்கிற செய்தியாக இருக்கிறது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கை கொள்வோம். தேவையில்லாத அச்சத்திலிருந்து ஆண்டவர் நம்மை விடுவிக்க வேண்டி மன்றாடுவோம். கடவுள் மீது நமக்கு அச்சம் இருக்க வேண்டும். தேவையில்லாத அச்சத்தை விட்டொழிப்போம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.