கடவுள் எங்கோ இல்லை

யோவான் 10.31-42

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இயேசு தன் பணியைச் செய்து வந்தார். “இதோ இக்குழந்தை இஸ்ராயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என்ற இறைவாக்கினர் சிமியோனின் வாக்கு (லூக் 2:24) செயல்பட தொடங்கியது. தன் சொந்த ஊரிலேயே அவருக்கு எதிர்ப்பு, அவரைக்கல்லால் எரிந்து கொல்லவும், கேள்விகள் கேட்டு அவமானப்படுத்தவும், வாதம் புரிந்து தோற்கடிக்கவும், சூழ்ச்சிகள் செய்து உரோமையர்களிடம் மாட்டி விடவும் பல முயற்சிகள்.

இவை அனைத்திற்குமான காரணம் அவர் கடவுளை தந்தை என்று அழைத்தும், என்னைக் காண்கின்றவன் தந்தையைக் காணலாம் என்றும், தந்தையின் செயலினையே நான் செய்கிறேன் என்றும், கடவுளை நம்மோடு ஐக்கியப்படுத்தியதற்காகவே, கடவுளை நம் மத்தியில் கொண்டு வந்ததற்காகவே, அவரை மத்தியில் விட்டு அனைவரும் ஏளனம் செய்தனர். யூதர்களைப் பொறுத்தவரை கடவுளை எங்கோ இருப்பவராகவேப் பார்த்தனர். அவரை தம்மில் ஒருவராக அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர் இப்படி, அப்படியென்று கடவுளுக்கு வரையறைக் கொடுத்தார்கள். கடவுளை தன் அறிவுத்திறனால் கட்டிப்போட நினைத்தார்கள். ஆனால் இயேசு இம்மானுவேலனாக (கடவுள் நம்மோடு) இருப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடவுளை எங்கோ இருப்பவர் என நினைத்து நம் வாழ்வினை அமைத்துக் கொண்டோம் என்றால் நாம் முற்றிலும் தேங்கிவிடுவோம். கடவுளின் செயல்கள் நம்மோடு இருக்கிறது. அவரின் வார்த்தைகள் நம்மை வழிநடத்துகிறது என்பதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே நம் வாழ்வு நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாய் அமையும்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.