களைகளுக்கு தேவை மூன்று சுற்றுலாக்கள்

மத்தேயு 13:24-30

சிறு குழந்தையாய் நாம் இருந்த போது களைகள் நமக்குள் இருப்பதில்லை. ஆனால் நாம் வளர வளர களைகளும் நமக்குள்ளே வளருகின்றன. களைகள் வருவது இயல்பு. ஆனால் அந்த களைகளை விரட்டுவது தான் புத்திசாலித்தனம். ஒரு புத்திசாலி எப்படி களைகளை விரட்ட முடியும் என்பதை நற்செய்தி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. களைகளை மூன்று வழிகளில் நாம் விரட்டலாம்.

1. அமைதி சுற்றுலா
அமைதியாக இருக்கும் போது தான் நாம் நம்மைப் பற்றி அறிகிறோம். நமக்குள்ளே இலவசமாக சுற்றுலா செல்கிறோம். இந்த இன்பச் சுற்றுலா நம்மை பற்றிய முழு அறிவையும் கொடுக்கிறது. நம் களைகள் அனைத்தையும் அமைதி சுற்றுலா நமக்கு முன்னே எடுத்து வைக்கிறது.

2. இயேசுவோடு சுற்றுலா
அமைதி சுற்றுலாவில் களைகளை கவனமாய் கண்டறிந்த பிறகு தியானம் மேற்கொள்ள வேண்டும். அந்த தியானம் இயேசுவாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு கொடுக்கும். அதிலே நாம் இயேசுவிடம் மன்னிப்பு கேட்டு மனம் வருந்தி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். நல்ல பாவசங்கீர்த்தனம் நம் பாதையை சீராக்கும்.

3. மகிழ்ச்சி சுற்றுலா
இயேசுவோடு சுற்றுலா சென்ற பிறகு மகிழ்ச்சியின் சுற்றுலா நமக்கு நிரந்தரமாக வேண்டும். அதற்காக களைகளை விரட்ட அனுதினமும் நாம் விடாமுயற்சியோடு போராட வேண்டும். அந்த போராட்டத்தில் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். அப்படி விரட்டினால் தினந்தோறும் தித்திப்பு தான்.

மனதில் கேட்க…
• இந்த சுற்றுலாக்களுக்கு நான் செல்லலாமா?
• இனி களைகளை எப்படி பறிக்க வேண்டும் என்பதை பிறருக்கு சொல்லி கொடுக்கலாமா?

மனதில் பதிக்க…
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர்(திபா 125:1)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.