சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதி நீங்கள்!

மத்தேயு 17:9, 10-13

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

திருமுழுக்கு யோவானை ஒரு சீர்திருத்தவாதி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்தான் மெசியாவின் வருகைக்காக அனைத்தையும் சீர்ப்படுத்தினார். உள்ளங்களை தயாரித்தார். மக்கள் மனமாற மணிக்கணக்கில் போதித்தார். மாற்றத்தை விளைவித்தார். அவரைப்போன்று நாமும் ஒரு சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதியாக மாற அழைக்கப்படுகிறோம். இரண்டு சீர்திருத்தங்கள் அவசியமாக செய்ய வேண்டும்.

1. கற்பதில் சீர்திருத்தம்
நாம் எதை கற்கிறோமோ அதற்கேற்றாற்போல் தான் நம் வாழ்வு அமையும். திருமுழுக்கு யோவான் நல்லதை தன்னுடைய குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டார். தீமையானவற்றை வெறுத்து ஒதுக்கினார். ஆகவே அவரால் சீர்திருத்தங்களை கொண்டு வர முடிந்தது. தீமையை கற்பவரால் நன்மையை கொண்டு வர முடியாது. ஆகவே தீமையை வெறுத்து ஒதுக்கும் சீர்திருத்ததை நம்மில் கொண்டு வருவோம்.

2. வாழ்வதில் சீர்திருத்தம்
வாழ்வதில் இப்படிதான் வாழ வேண்டும் என்ற சீர்திருத்தத்தை திருமுழுக்கு யோவான் கொண்டிருந்தார். ஆகவே தான் அவரால் ஆதிக்க கும்பலை எதிர்த்து அவ்வளவு துணிச்சலாக நிற்க முடிந்தது. நாம் இப்படி வாழ வேண்டும் என்ற வரையறையை நம்முள் வைக்கும்போது தான் நம் வாழ்வில் சீர்திருத்தம் இருக்க முடியும். திருமுழுக்கு யோவானைப் போன்று மிகச்சிறந்த சீர்திருத்தவாதியாக மாற நம் வாழ்வை சீரமைப்போம்.

மனதில் கேட்க…
1. திருமுழுக்கு யோவானிடம் இருந்த சீர்திருத்த பண்பு என்னிடம் உள்ளதா?
2. கற்பதில், வாழ்வதில் சீர்திருத்தங்களை கொண்டு வர முயற்சிகள் எடுக்கலாம் அல்லவா?

மனதில் பதிக்க…
பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்(எசா 40:4)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.