செய், சொல்

யோவான் 20 : 1-9

இயேசுவின் உயிர்ப்பு நமது நம்பிக்கையின் மூலைக்கல், ஆதாரம். அதை நம்புவதும், அடுத்தவருக்கு அறிவிக்க பெண்களைப்போல நற்செய்தியாளர்களாய், திருத்தூதர்களாய் செயல்படுவதும் நமது கடமை. இயேசுவின் உயிர்ப்பே இன்று நம் அனைவரையும் ஒன்று கூட்டி வைத்திருக்கின்றது. மரணத்தை வென்றவர்கள் தான் நாம். காரணம் சாவின் கொடுக்குகளை வெட்டியெறிந்து விட்டார் நம் இயேசு. இதனை நாம் கொண்டாட கூடியுள்ளோம். மனித இனத்தின் மிகவும் மோசமான எதிரி சாவு. இச்சாவினை இயேசுதன் சாவினைக் கொண்டு வீழ்த்தி விட்டார். நற்செய்தி கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகிறது என்பதைவிடக் கிறிஸ்துவின் உயிப்ப்பே நற்செய்தியை விளக்குகிறது.ள ஏனெனில் கிறிஸ்து உயிர்க்கவி;ல்லையென்றால் நமது நம்பிக்கைப் பொருளற்றது. ( 1 கொரி 15:14)

ஆண்டவரின் உயிர்ப்பு செய்தி முதன்முறையாகப் பெண்களுக்குத் தான் அறிவிக்கப்பட்டது. அவர்கள் மூலமாகவே உண்மையானது உலகிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. யூத சமுதாயத்தில் பெண்களின் சாட்சிசெல்லவே செல்லாது. ஆனால் தொடக்க முதல் இறுதிவரை ஒடுக்கப்பட்டவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும் தேர்ந்தெடுக்கின்ற இயேசு, இங்கும் அவர்களையே தேர்ந்தெடுக்கின்றார். பெண்ணிடமிருந்து பிறந்தவர் தாம் உயர்த்தெழுந்த செய்தியைப் பெண்களுக்கு அறிவிக்கின்றார். இயேசுவின் பிறப்பும் பெண்ணை மையப்படுத்தியே தொடங்குகிறது. உயிர்ப்பும் பெண்ணை மையப்படுத்தியே தொடங்குகிறது. சனிக்கிழமையானது கடவுளின் நாளாக கருதப்பட்டது யூதர்களின் கலாச்சாரத்தில். ஆனால் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையே கடவுளிக் நாளாக மாறியது. காரணம் இயேசு இந்த ஞாயிற்றுக்கிழமையில்தான் மரணத்தை வென்றார். படைப்பின் தொடக்கத்தை பழைய ஏற்பாட்டில் முதல் நாள் வெளிப்படுத்தியது. ஆனால் அழிவுக்குள்ளான அப்படைப்பு இயேவுலின் உயிர்ப்பின் மூலம் புதுப்படைப்பாகின்றது. இதையே இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். “ வாரத்தின் முதல் நாள் விடியற்காலை” என்று. பழையன கழிந்து புதியன புலரும் இப்புதிய நாளில்தான் நமதாண்டவர் உயிர்த்தார். பாவ வாழ்வு அனைத்தும் கல்லறையில் புதைக்கப்பட்டு, “புதிய வானம்” புதிய பூமி” ஆரம்பமாகும் அரிய நாளே ஆண்டவர் உயிர்த்த நாள். என்னைப் பொறுத்தவரையில் இயேசுவின் உடலானது கல்லறையில் வைக்கப்படவில்லை, அது ஒரு கருவறை. காரணம் அது ஒரு புதிய கல்லறை. இங்கு இருந்து தான் இவ்வுலகத்தின் இரட்சகர் பிறக்கிறார்.

இவ்வாறு இயேசுவின் இறப்போடு நம் பழைய பாவவாழ்வு அனைத்தும் அழிக்கப்படுகிறது. நாம் அனைவரும் புதுப்படைப்பாக, விடுதலைப் பெற்றவர்களாக,சாவை வென்றவர்களாக, இறையாட்சியை நோக்கி நடைபோடுவோம். இதன் அடிப்படையில் தான் நாம் நம் திருமுழுக்கினைப் புதுப்பிக்கிறோம். இந்த உயிர்ப்பின் நாளில் இதனையே பிறரிடம் எடுத்து செசல்வோம். எடுத்துச் சொல்வோம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.