திக்கற்றவர்களாக விடமாட்டேன்

நாம் ஒருவர் ஒருவரை எவ்வாறு அறிமுகம் செய்கிறோம் என்பதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம். அது இயேசு விரும்பும் சமூகத்தை உருவாக்கும். நாம் பொதுவாக ஒருவரை அறிமுகம் செய்யும்போது, இவர் படித்திருக்கிறார்; இவர் ……. சம்பளம் வாங்குகிறார்; இவர் இந்தப் பதவியில் இருக்கிறார் என்றுச் சொல்லி அறிமுகம் செய்கிறோம்.இவர் அன்புள்ளம் கொண்டவர்; ஏழைகளுக்கு இரங்குபவர்; நியாயம் நீதியோடு வாழ்பவர் என்று யாருடைய நற்பண்புகளையும் சொல்லி அறிமுகம் செய்வது மிக அரிதாகிவருகிறது.

இறைவன் தன்னை வெளிப்படுத்தும்போதெல்லாம் தன்னை அன்புசெய்யும் இறைவனாக அறிமுகம் செய்கிறார். அன்புசெய்து அவர்களோடு குடிகொள்ளும் தெய்வமாக அறிமுகம் செய்கிறார். “நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்”(யோவான் 14:23). “திக்கற்றவர்களாக விடமாட்டேன்”(யோவான்14:18) “கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்”(1 யோவான் 1:9) நம்மை திக்கற்றவர்களாக கைவிடாத இறைவன், நம்மோடு குடிகொள்ள விரும்பியதால், இம்மானுவேல் இறைவனாக இவ்வுலகில் பிறந்தார். தொடர்ந்து நம்மை வாழ்விக்க விரும்பிய இறைவன் தூய ஆவியாம் இறைவனைத் துணையாளரா நமக்கு அனுப்ப வாக்கு கொடுக்கிறார்.

அன்பை அடிப்படை தகுதியாக வைத்து அறிமுகம் செய்யும் சமூகம் ஒரு தெய்வீக சமூகம். அங்கே யாரும் கைவிடப்படுவதில்லை. திக்கற்றவர்கள் யாரும் இல்லை. இறைவன் அவர்களை தாங்கி வழிநடத்துவார். இத்தயை நற்பண்பில் நம்மை உருவாக்குவோம். எக்குறையும் இன்றி இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

~ அருட்திரு ஜோசப் லியோன்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.