நம்பிக்கையின்மையை நீக்க உதவும்

தீய ஆவி பிடித்திருந்த இளைஞனின் தந்தை இயேசுவை நோக்கி, “உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்ட, இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” என்று சொல்ல, அச்சிறுவனின் தந்தை “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்” என்று கதறினார். இயேசு அவரைக் குணமாக்கினார்.

அந்தச் சிறுவனின் தந்தையைப் போன்ற மனநிலையே நம்மிலும் இருக்கலாம். அப்படியானால், அவரைப் போன்றே நாமும் மன்றாட வேண்டும். பல நேரங்களில் நமது விசுவாசம், இறைநம்பிக்கை நிறைவானதான, முழுமையானதாக இல்லை. எனவேதான், இறைவனின் நன்மைத்தனத்தை, பேரன்பை நாம் சந்தேகிக்கிறோம். எனவே, நாமும் நமது நம்பிக்கையின்மை நீங்க உதவவேண்டும் என்று இறைவனிடம் மன்றாட வேண்டும்.

மேலும், இறைநம்பிக்கை என்பதே இறைவனின் ஒரு கொடைதான் என்பதையும் இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. அவரது அருளின்றி, இறைவன்மீது நாம் நம்பிக்கை கொள்ள முடியாது, அவரை அப்பா, தந்தாய் என்று அழைக்கவும் முடியாது. எனவே, விசுவாசம் என்னும் கொடைக்காகவும், அந்த நம்பிக்கை நிறைவானதாகவும் இருக்க வேண்டுவோம்.

மன்றாடுவோம்: நன்மைகளின் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மை எங்கள் ஆண்டவராகவும், மீட்பராகவும் ஏற்கும் நம்பிக்கையை எங்களுக்குத் தந்தருளும்! எங்கள் வாழ்வில் நிகழும் அனைத்தும் எங்கள் நன்மைக்கே என்று நம்பும் மனநிலையை எங்களுக்குத் தந்தருளும். உம்மால் எல்லாம் கூடும் என்னும் என்னும் நம்பிக்கையை ஆழப்படுத்தும். எங்கள் நம்பிக்கையின்னை நீங்க உதவும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

– பணி குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.