நிமிர்ந்து கடவுளைப் போற்று…

லூக்கா 13:10-17

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
லூக்கா 13:10-17

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

திருப்பாடல் 103:2 இவ்வாறு சொல்கிறது, “என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!” கடவுள் நாம் கருவான நாள் முதல் இந்நாள் வரை பல கனிவான செயல்களால் நம்மை கண்ணின் கருவிழிபோல காத்து வருகின்றார். அவரை நாம் போற்ற வேண்டும், கடவுளை எப்படி போற்ற வேண்டும் என்பதை தீய ஆவியிலிருந்து நலம் பெற்ற நபர் இன்றைய நற்செய்தியில் நமக்கு கற்றுத்தருகிறார். நிமிர்ந்து பார்த்து ஆண்டவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நிமிர்ந்துப் பார்த்து அவரைப் போற்ற வேண்டும். கடவுளைப் போற்ற இரண்டு வழிமுறைகள் சிறந்த வழிமுறைகளாக தென்படுகின்றன.

1. சத்தமாக ஜெபிப்பது
முன்னர் சத்தமாக ஜெபங்களை சொன்ன நாம் இப்போது சத்தமாக ஜெபிப்பதில்லை. ஆலயத்தில் பார்க்கும்போது பாடகர் குழுவினர் மட்டும்தான் ஜெபங்களை சொல்கின்றனர். மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பது போன்று நிற்கின்றனர். இது தவறு. சத்தமாக ஆண்டவரை ஜெபங்களை சொல்லி போற்ற வேண்டும். சத்தமாய் ஜெபங்களைச் சொல்லி ஆண்டவரைப் போற்றும் அந்த வாய்ப்பை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.

2. கரம் குவிப்பது
ஆலயத்தில் வழிபாடு நடக்கும்போது பலர் கரங்களை குவிப்பதே கிடையாது. அது தவறு. அவர் செய்த நன்மைகளுக்காக கரம் குவியுங்கள். நம் பாவங்களை மறந்து, மன்னித்தாரே அதற்காக கரம் குவியுங்கள். நம்மை ஆபத்து, விபத்திலிருந்து காத்தாரே அதற்காக கரம் குவியுங்கள். நமக்கு உணவு, உடை, உறவிடம் கொடுத்து சுகமாய் காத்துக்கொணடிருக்கிறாரே அதற்காக கரம் குவியுங்கள். கரம் குவிக்க மறக்காதீர்கள்.

மனதில் கேட்க…
1. தினமும் காலையில் கடவுளைப் போற்றுகிறேனா?
2. நாள்முழுவதும் சிறப்பாக காத்ததற்காக கரம் குவித்து சத்தமாக கடவுளைப் போற்றுகிறேனா?

மனதில் பதிக்க
அல்லேலூயா! தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்!(திபா 150:1)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.