நிலையான, நிறைவான மகிழ்ச்சி

இயேசு கிறிஸ்து ”உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்” என்று சொல்கிறார். கிறிஸ்தவர்களாக இருக்கக்கூடிய நமக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சி பரிசாகக் கிடைக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் வாயிலாக நாம் பார்ப்போம். 1. கிறிஸ்து தருகிற மகிழ்ச்சி நம்மிடமிருந்து எடுக்கப்படாது. உதாரணமாக, ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அந்த பொருளை வாங்கியும் விடுகிறோம். நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சி எத்தனை காலம் இருக்கும்? ஒருநாள் இருக்கும். ஒரு வாரம் இருக்கும். அவ்வளவுதான். அந்த மகிழ்ச்சி காலப்போக்கில் மறைந்துவிடும். ஆனால், இயேசு தரக்கூடிய மகிழ்ச்சி காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

இயேசு தரக்கூடிய மகிழ்ச்சியின் இரண்டாவது பண்பு 2. நிறைவான மகிழ்ச்சி. முழுமையான மகிழ்ச்சி. ஒரு பொருளை நாம் வாங்குகிறபோது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி நிறைவான மகிழ்ச்சி அல்ல. அதைவிட சிறந்த பொருளைப் பார்க்கிறபோது, அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதை வாங்கினாலும், நமது மகிழ்ச்சி நிறைவு கொள்வதில்லை. இன்னும் வாங்க வேண்டும், என்ற எண்ணம் நமக்குள்ளாக ஏற்படுகிறது. காரணம், பொருட்களினால் நாம் பெறும் மகிழ்ச்சி நிறைவான மகிழ்ச்சி அல்ல. ஆனால், இயேசு தரும் மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொண்டால், அதை மிஞ்சிய மகிழ்ச்சியை யாரும் நமக்குத்தர முடியாது. அதற்கு மேல் நாம் மகிழ்ச்சியைத் தேட மாட்டோம்.

இந்த உலகத்தில் அனைவருமே மகிழ்ச்சியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியை பொருளிலும், பதவியிலும், அதிகாரத்திலும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இயேசுவிடம் மட்டும்தான் நிலையான, நிறைவான மகிழ்ச்சியைப் பெற முடியும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.