நீங்கள் நினைப்பதை விட பெரியவர்

மத்தேயு 12:38-42

பழைய ஏற்பாடு நாம் நினைப்பதை விட கடவுள் மிகவே பெரியவர் என்பதை பல இடங்கிளில் சொல்லித் தருகிறது. தொடக்கநூல் 1:1லே வெறுமையுற்று இருந்த உலகை ஒரே ஒரு வார்த்தையினால் அழகான பூஞ்சோலையாக்கினார். வானிலிருந்து மன்னாவை பொழந்து வியப்புக்குரிய கடவுள் யாவே என்பதை மக்களுக்கு அறிவிக்கிறார். செங்கடலை இரண்டாகப் பிரித்து இஸ்ரயேல் மக்களுக்கான பசுமை வழிச்சாலையாக அதனை மாற்றுகிறார். இப்போது உங்களுக்கு புரிந்ததா? உங்கள் கடவுள் நீங்கள் நினைப்பதை விட பெரியவர், அதிக ஆற்றல் நிறைந்தவர்.

புதிய ஏற்பாடு நாம் நினைப்பதை விட இயேசு கிறிஸ்து மிக மிக பெரியவர் என்பதை சொல்லித் தராமல் இல்லை. ஐயாயிரம் பேருக்கு அதிசய உணவளிக்கிறார், காலூனமுற்றவரை காலூன்றி நடக்கச் செய்கிறார். பேச்சிழந்தவரை பேச வைக்கிறார், ஆடையின் விளிம்பைத் தொட்டவர் அதிசயமாய் சுகம் பெறுகிறார். இதைவிட இன்னும் சான்றுகள் நமக்குத் தேவையா? உங்கள் கடவுள் நீங்கள் நினைப்பதை விட பெரியவர், அதிக ஆற்றல் நிறைந்தவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நீங்கள் அரும்அடையாளங்களுக்காக என்னைத் தேடினால் என் ஆற்றலை கண்டுக்கொள்ளமாட்டீர்கள். மாறாக நம்பிக்கையினால் தேடினால் கண்டுக்கொள்வீர்கள் என்கிறார். அரும்அடையாளுங்காக நாம் தேடினால் எதிர்பார்த்து ஏமாற்றம் தான் கிடைக்கிறது. நமது நம்பிக்கையினால் சான்று பகறும் போது கடவுளின் மாபெரும் ஆற்றல் நமக்கு புரிகிறது.

மனதில் கேட்க…

கடவுளின் பிரம்மாண்டமான ஆற்றல் பற்றி எனக்கு புரிகிறதா?
புதுமைகளுக்காக தேடாமல் கடவுளைப் பற்றி புரிந்து தேடலாமே?

மனதில் பதிக்க…
இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! (மத் 12:42)

-அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.