பதவி உயர்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறீர்களா?

மத்தேயு 24:42-51

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

நம்முடைய நிலையில் அப்படியே இருக்க யாரும் விரும்புவதில்லை. எல்லாருக்கும் இருக்கும் நிலையிலிருந்து ஒரு முன்னேற்றம் வேண்டும் என்பது அனைவரின் ஆசை. இருக்கும் நிலையில், பணியில் ஒரு பதவி உயர்வு கிடைக்குமா என்பது நம் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற உதவியாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். பதவி உயர்வுக்காக இரண்டு பாடங்களை நாம் படிக்க வேண்டும். படித்து பயிற்சியாக்க வேண்டும்

முதல் பாடம்: விழிப்பு
முதல் பாடம் மிகவும் முக்கியமானது. விழிப்போடு இருப்பவர்கள் தான் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க முடியும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது, நாம் இருக்கும் இடத்தில் என்ன நடக்கிறது, பணியிடத்தில் என்ன நடக்கிறது என்ற விழிப்பு தான் வாழ்க்கையில் பதவி உயர்வு கிடைக்க மிக சிறந்த உதவியாக இருக்கும்.

இரண்டாம் பாடம்: உழைப்பு
நன்றாக உழைக்கும் மனிதர் உயர்ந்துக்கொண்டே இருப்பர். நம்மைச் சுற்றி பலர் தவறான எண்ணத்தோடு வாழ்கின்றனர். அது என்ன? உழைக்காமல் வாழலாம், உண்ணலாம் என பல தீய எண்ணங்களோடு இருப்பர். அது முற்றிலும் தீங்கு விளைவிக்க கூடியது. உழைத்தால் தான் உயர முடியும். உழைப்பே பதவி உயர்வைத் தரும்.

மனதில் கேட்க…
1. என் வாழ்க்கையில் இதுவரை எனக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கிறதா?
2. விழிப்போடும் ஆர்வத்தோடும் நான் உழைக்க முயற்சி செய்யலாமே?

மனதில் பதிக்க…
உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது (2 தெசலோனிக்கர் 3:10)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.