பார்வை பெறவேண்டும் !

கண்களால் பார்த்தும், உண்மையைக் கண்டுகொள்ளாதவர்கள்பற்றி இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள் காட்டி இயேசு கூறுகிறார்; இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள். எனவே, கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்.

பார்க்க விரும்புகிறவர்கள் இறைவனின் இரக்கப் பெருக்கை வாழ்வின் எந்த நிகழ்விலும் பார்க்க முடியும். கண்களை மூடிக்கொள்பவர்கள் இறைவனின் பேரன்பை எந்த நிகழ்விலும் காண முடியாது. இது மனம் மாறாத தன்மை என்கிறார் ஆண்டவர்.

பார்க்க இயலாததும், பார்க்க மறுப்பதும் பாவம். நாம் மனம் மாறவேண்டும். கண்களை அகலத் திறந்து இறைவனின் இருத்தலை ஒவ்வொரு நிகழ்விலும் பார்க்கத் துணிவோமாக!

மன்றாடுவோம்; பார்வையின் ஒளியே இயேசுவே, நீரே எமது ஒளி, நீரே எமது, நீரே எமது வாழ்வு. உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீர் எங்களோடு இருக்கிறீர், உரையாடுகிறீர் என்று காண, உணர, அனுபவிக்க எங்களுக்குப் புதிய பார்வையைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருட்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.