புதுவாழ்வு பெற…

இயேசு விரும்பும் சில செயல்களைச் நம்மில் பலரும் செய்தால் ஒவ்வொரு நாளும் புதுமையானவற்றை நம் வாழ்வில் காணலாம். எங்கெல்லாம் நோயுற்றவர்கள், இயலாதவர்கள், ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களோ, அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் குணம்பெறவும் புது வாழ்வு பெறவும் அவர்களைத் தூக்கி, தாங்கி வழி நடத்தி வந்தால், புதுமையானவற்றைக் காணலாம்.

ஆகவே புதுமையானவற்றைக் காண நல்லவர்கள் நான்கு பேர், விவரம் தெறிந்தவர்கள், துணிச்சல் உள்ளவர்கள் முன்வர வேண்டும். வீட்டில் மக்கள் கூடுவதற்கும், வீட்டின் கூரையைப் பிரிப்பதற்கும் சம்மதம் தரும் நல் உள்ளம் கொண்டவர் தேவை. என்ன நடந்தாலும் குறை சொல்வதற்கென்றே சிலர் உண்டு. அவர்களும் தேவை. இவர்களின் எதிர்ப்பு, பட்டம் உயர பயன்படும் எதிர்காற்றாகும். அதே வேளையில் எப்போதும் கடவுளைப் போற்றிப் புகழும் இன்னொரு குழுவினரையும் பார்க்கிறோம்.

இவர்கள் எல்லோரும் சேர்ந்து இயேசுவிடம் வந்ததால் புதுமையானவற்றை அன்று கண்டார்கள். பாவம் மன்னிக்கப்பட்டதை அனுபவித்து உணர்ந்தார்கள். முடக்கு வாதமுற்றவன் எழுந்து நடக்கக் கண்டார்கள். இன்றும் வேறுபட்ட நாம் அனைவரும் சேர்ந்து வந்தால் புதுமையானவற்றை என்றும் காணலாம்.

~ அருட்திரு ஜோசப் லியோன்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.