போற்றவும் தூற்றவும் கடந்து பணியில் நிலைப்போம்

இயேசு தம் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பாராட்டும் புகழ்ச்சியும் வணக்கமும் பெற்றாரோ, அந்த அளவுக்கு இகழ்ச்சியும், புரிந்துணர்வின்மையும், அவதூறும் பெற்றுக்கொண்டார் என்பது உண்மை. அந்த உண்மையெ மாற்கு அச்சமின்றி எழுதிவைத்திருக்கிறார். என்ன காரணம்?

1. நற்செய்தி அறிவிப்பாளரின், இறைவாக்கினரின், பேராளியின் பணியில் எதிர்ப்புகளும், ஏளன விமர்சனங்களும் எழத்தான் செய்யும். அதையெல்லாம் தூசு எனப் பறந்கள்ளிவிட்டு பணியைச் தொடரவேண்டும். யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுறோம் (லூக் 10:11) என்று சொல்லித் தம் பணியைச் தொடரச் சீடரைப் பணித்தார் அல்லவா! அந்த மனநிலையை இயேசுவும் கொண்டிருந்தார் என்று காட்ட.

2. பச்சை மரத்துக்கோ இவ்வாறு செய்கின்றார்கள் என்றால், பட்ட மரத்துக்கு என்னதால் செய்யமாட்டார்கள்? (லூக்கப 23:31) என இயேசுவே உரைக்கவில்லையா? எனவே நம் வாழ்வில் நாம் சந்திக்கின்ற அவதூறுகள் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று நமக்குச் சுட்டிக்காட்ட.

எனவே யாராவது நம்மைப் பற்றி ஏளனமாகவோ, அவதூறாகவோ பேசினால், கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் (பிலிப் 2:5) என்றும் பவுலடியாரின அறிவுரையை மனதில் கொள்வோம்.

இயேசுவே, உம்மைப் போலவே நாங்களும் இழிவுரைகளைப் புறக்கணித்து, பணியைத் தொடர ஆற்றல் தாரும் -ஆமென்.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.