வானங்கள் இறைவனின் மாட்சியை வெளிப்படுத்தும்

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4

மனிதர்களுக்காக கடவுள் தரும் செய்தி என்ன? கடவுள் மனிதர்களை எதற்காகப் படைத்தார்? கடவுள் மனிதர்களை தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னை மாட்சிமைப்படுத்தி கடவுள் மனிதர்களைப் படைத்தார். மனிதன் தன்னுடைய சுயநலத்தால் கடவுளோடு இருக்கிற தொடர்பை இழந்துவிட்டான். பாவத்திற்கு ஆளாகிவிடுகிறான். கடவுள் மனிதனை கைவிட்டுவிடவில்லை. அவனை மீட்பதற்காக தன்னுடைய ஒரே மகனையே கையளிக்கிறார்.

இயேசு இந்த உலகத்தில் மனிதராக பிறந்து, தன்னையே பலியாக்கி விண்ணகம் செல்கிறபோது, ”படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். படைப்பிற்கு நற்செய்தி அறிவிப்பதை அவர் இலக்காக மானிட சமுதாயத்திற்கு தருகிறார். ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கடமையாக இருக்கிறது. இன்றைய திருப்பாடலின் மையச்செய்தியும் இதுதான். படைப்பு அனைத்துமே கடவுளின் மாட்சிமையை தங்களது பிரசன்னத்தின் மூலமாக அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ”ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கிறது. அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது” என்கிற வார்த்தைகள், இந்த செய்தியை வலுப்படுத்துகின்றன.

நம்முடைய வாழ்க்கை நற்செய்தி அறிவிப்பு பொறுப்பை தாங்கியிருக்கிற வாழ்வாக அமைய வேண்டும். நம்மை படைத்த இறைவனை போற்றிப்புகழ்கிற வாழ்வாக அமைய வேண்டும். அதைத்தான் படைப்புக்கள் அனைத்தும் தொடக்கத்திலிருந்து இன்றளவும் செய்து வருகின்றன. நாமும் இயற்கையை வழிகாட்டியாகக் கொண்டு நம்முடைய வாழ்வை மாற்றியமைப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
மனிதர்களுக்காக கடவுள் தரும் செய்தி என்ன? கடவுள் மனிதர்களை எதற்காகப் படைத்தார்? கடவுள் மனிதர்களை தன்னுடைய சாயலில் படைத்தார். தன்னை மாட்சிமைப்படுத்தி கடவுள் மனிதர்களைப் படைத்தார். மனிதன் தன்னுடைய சுயநலத்தால் கடவுளோடு இருக்கிற தொடர்பை இழந்துவிட்டான். பாவத்திற்கு ஆளாகிவிடுகிறான். கடவுள் மனிதனை கைவிட்டுவிடவில்லை. அவனை மீட்பதற்காக தன்னுடைய ஒரே மகனையே கையளிக்கிறார்.

இயேசு இந்த உலகத்தில் மனிதராக பிறந்து, தன்னையே பலியாக்கி விண்ணகம் செல்கிறபோது, ”படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். படைப்பிற்கு நற்செய்தி அறிவிப்பதை அவர் இலக்காக மானிட சமுதாயத்திற்கு தருகிறார். ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கடமையாக இருக்கிறது. இன்றைய திருப்பாடலின் மையச்செய்தியும் இதுதான். படைப்பு அனைத்துமே கடவுளின் மாட்சிமையை தங்களது பிரசன்னத்தின் மூலமாக அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. ”ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கிறது. அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது” என்கிற வார்த்தைகள், இந்த செய்தியை வலுப்படுத்துகின்றன.

நம்முடைய வாழ்க்கை நற்செய்தி அறிவிப்பு பொறுப்பை தாங்கியிருக்கிற வாழ்வாக அமைய வேண்டும். நம்மை படைத்த இறைவனை போற்றிப்புகழ்கிற வாழ்வாக அமைய வேண்டும். அதைத்தான் படைப்புக்கள் அனைத்தும் தொடக்கத்திலிருந்து இன்றளவும் செய்து வருகின்றன. நாமும் இயற்கையை வழிகாட்டியாகக் கொண்டு நம்முடைய வாழ்வை மாற்றியமைப்போம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.