வாழ்க்கைப் போராட்டம்

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நம்மை நிலைநிறுத்தி வெற்றிகாண்பதில் வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது. எதற்காக வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்? நாம் நினைப்பது ஒன்றாக இருக்கிறது. ஆனால், நாம் செய்வது மற்றொன்றாக இருக்கிறது. ஏன்? இந்த உலகத்தில் நடக்கிற நிகழ்வுகள். நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக எதிர்ப்புக்களைச் சந்திக்கிறோம். ஆனால், இறுதியில் நாம் தனித்து விடப்படுகிறோம். இந்த உலகத்தின் பார்வையில் பிழைக்கத் தெரியாதவனாக தோன்றுகிறோம். அப்போது நமக்குள்ளாக பல கேள்விகள் தோன்றுகிறது. நாம் செல்லக்கூடிய பாதை சரி தானா? மற்றவர்கள் சொல்வது போல நாம் பிழைக்கத் தெரியாதவர்களா? இது ஒரு போராட்டம். இந்த போராட்டத்தில் நாம் எடுக்கும் முடிவு முக்கியமானது.

இந்த உலகம் தனக்கென்று ஒரு சில மதிப்பீடுகளை வழிவகுத்து இருக்கிறது. ஆனால், இந்த உலகத்தில் வாழ்கிறவர்கள், அந்த மதிப்பீடுகளை புறந்தள்ளும்விதமாக, தங்களுக்கென்று, தங்களுக்காக ஒருசிலவற்றை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். மற்றவர்களையும் அப்படி வாழ்வதற்கு தூண்டுகிறார்கள். ஆக, இதுதான் உலக மதிப்பீடுகள் என்ற தவறான மாயத்தோற்றம் உருவாக்கப்படுகிறது. இந்த மாயத்தோற்றத்தை உடைத்து, உண்மையான மதிப்பீடுகளின்படி வாழ்வது மிகப்பெரிய சவால். அதற்கு நம்முடைய ஆன்மீகம் உறுதியானதாக இருக்க வேண்டும். இந்த உலகத்தின் மாயத்தோற்றத்திற்கும், மதிப்பீடுகளுக்கும் இடையேயான போராட்டம் தான் வாழ்க்கைப் போராட்டம். அதில் வெற்றி பெற நாம் உறுதிகொள்ள வேண்டும்.

வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெறுவது எளிதான காரியமல்ல. அது ஒரு சவாலான காரியம். ஆனால், அதில் வெற்றி பெற்றவர்களை வரலாறு நினைவில் வைத்திருக்கிறது. அவர்களை உதாரணங்களாக நமக்குத் தருகிறது. நமது வாழ்வில், நமது பெயரும் வரலாற்றில் இடம்பெயரும் அளவிற்கு நாம் சிறப்பாக வாழ முற்படுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.