Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எஸ்ரா

அதிகாரம் 2

சிறையிருப்பினின்று திரும்பி வந்தோரின் பட்டியல் (நெகே 7:4-73)
1 அடிமைத்தனத்திலிருந்தும் நாடு கடத்தப்பட்ட இடத்தனின்றும் திரும்பி வந்த அம் மாநில மக்கள் இவர்களே. அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், பாபிலோனுக்கு அடிமைகளாக இட்டுச் சென்றிருந்தான். இவர்களே எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தம் நகர்களுக்கும் திரும்பிச் சென்றவர்கள்.2 செருபாபேலோடு வந்தவர்கள்: ஏசுவா, நெகேமியா, செராயா, இரகேலயா, மொர்தக்காய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், இரகூம், பானா. இஸ்ரயேல் மக்களுள் ஆண்களின் எண்ணிக்கை:3 பரோசின் மக்கள் இரண்டாயிரத்து நூற்று எழுப்பத்திரண்டு பேர்.4 செபத்தியாவின் மக்கள் முன்னூற்று எழுபத்திரண்டு பேர்.5 ஆரகின் மக்கள் எழுநூற்று எழுபத்தைந்து பேர்.6 ஏசுவா, யோவாபு இவர்களின் வழிவந்த பகத்து, மோவாபு மக்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டு பேர்.7 ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.8 சத்தூவின் மக்கள் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து பேர்.9 சக்காயின் மக்கள் எழுநூற்று அறுபது பேர்.10 பானியின் மக்கள் அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.11 பேபாயின் மக்கள் அறுநூற்று இருபத்து மூன்று பேர்.12 அசகாதின் மக்கள் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர்.13 அதோனிக்காமின் மக்கள் அறுநூற்று அறுபத்தாறு பேர்.14 பிக்வாயின் மக்கள் இரண்டாயிரத்து ஐம்பத்தாறு பேர்.15 அதீனின் மக்கள் நானூற்று ஐம்பத்து நான்கு பேர்.16 எசேக்கியாவின் வழிவந்த ஆற்றேரின் மக்கள் தொண்ணூற்றெட்டுப் பேர்.17 பேசாயின் மக்கள் முந்நூற்று இருபத்து மூன்று பேர்.18 யோராவின் மக்கள் நூற்றுப் பன்னிரண்டு பேர்.19 ஆசுமின் மக்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.20 கிப்பாரின் மக்கள் தொண்ணூற்றைந்து பேர்.21 பெத்லகேமின் மக்கள் நூற்று இருபத்து மூன்று பேர்.22 நெற்றோபாவின் ஆண்கள் ஐம்பத்தாறு பேர்.23 அனாதோதின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.24 அஸ்மாவேத்தின் மக்கள் நாற்பத்திரண்டு பேர்.25 கிரியத்து ஆரிம், கெபீரா, பெயரோத்து மக்கள் எழுநூற்று நாற்பத்து மூன்று பேர்.26 இராமா, கேபா மக்கள் அறுநூற்று இருபத்தொருபேர்.27 மிக்மாசின் ஆண்கள் நூற்றுஇருபத்திரண்டு பேர்.28 பெத்தேலிலும், ஆயிலும் உள்ள ஆண்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.29 நெபோவின் மக்கள் ஐம்பத்திரண்டு பேர்.30 மக்பீசின் மக்கள் நூற்றைம்பத்தாறு பேர்.31 மற்றொரு ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.32 ஆரிமின் மக்கள் முந்நூற்றிருபது பேர்.33 லோது, ஆதிது, ஒனோ ஆகியோரின் மக்கள் எழுநூற்றிருபத்தைந்து பேர்.34 எரிகோவின் மக்கள் முந்நூற்று நாற்பதைந்து பேர்.35 செனா மக்கள் மூவாயிரத்து அறுநூற்று முப்பது பேர்.36 குருக்கள்: யோசுவாவின் வீட்டாரான எதாயாவின் மக்கள் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்.37 இம்மேரின் மக்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்.38 பஸ்கூரின் மக்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்.39 ஆரிமின் மக்கள் ஆயிரத்துப் பதினேழு பேர்.40 லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யேசுவா கத்மியேலின் மக்கள் எழுபத்து நான்கு பேர்.41 பாடகர்கள்: ஆசாபு மக்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.42 வாயிற்காவலரின் வழிவந்த சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்கூபு, அத்தித்தா, சோபாய் ஆகியவரின் மக்களனைவரும் நூற்று முப்பத்தொன்பது பேர்.43 கோவில் ஊழியர்கள்: சிகாபின் மக்கள், அசுபாவின் மக்கள், தபாயோத்தின் மக்கள்.44 கேரோசின் மக்கள், சீயகாவின் மக்கள், பாதோனின் மக்கள்,45 இலபனாவின் மக்கள், அகாபாவின் மக்கள், அக்கூபின் மக்கள்,46 காகாபின் மக்கள், சம்லாயின் மக்கள், கானானின் மக்கள்,47 கிதேலின் மக்கள், ககாரின் மக்கள், இரயாயாவின் மக்கள்,48 இரத்சீனின் மக்கள், நெக்கோதாவின் மக்கள், கசாம் மக்கள்,49 ஊசாவின் மக்கள், பர்சயாகின் மக்கள், பேசாயின் மக்கள்,50 அஸ்னாவின் மக்கள், மெய்யோனிம் மக்கள், நெபிசிம் மக்கள்,51 பக்பூக்கின் மக்கள், அகுப்பாவின் மக்கள், அர்கூரின் மக்கள்,52 பட்கலூத்தின் மக்கள், மெகிதாவின் மக்கள், அர்சாவின் மக்கள்,53 பர்கோசின் மக்கள், சீசராவின் மக்கள், தேமாவின் மக்கள்,54 நெட்சியாகின் மக்கள், அத்திபாவின் மக்களுமே!55 சாலமோன் ஊழியரின் மக்கள்:56 சோற்றாயின் மக்கள், அசோபரேத்தின் மக்கள், பெருதாவின் மக்கள், யாலாவின் மக்கள், தர்கோனின் மக்கள், கிதேலின் மக்கள்,57 செபற்றியாவின் மக்கள், அற்றலின் மக்கள், சபாயிம் வழிவந்த போக்கரேத்தின் மக்கள், ஆமியின் மக்கள்.58 கோவில் ஊழியர்களும் சாலமோன் ஊழியரின் மக்களுமாக மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.59 மற்றும், தெல்மெலகு, தெல்லர்சா, கெருபு, அதான், இம்மேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களும், தங்கள் மூதாதையரின் குடும்பத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்களா என்பதையும் நிருபிக்க அறியாதவர்கள் இவர்களே:60 தெலாயாவின் மக்களும், தோபியாவின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.61 மற்றும், குருக்களின் புதல்வர்கள்: அபய்யாவின் மக்கள், அக்கோசின் மக்கள், கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மனைவியாகக் கொண்டதால் அவர்தம் பெயரைத் தாங்கிய பர்சில்லாயின் மக்கள்.62 இவர்கள் தங்கள் பெயர்ப் பதிவைத் தலைமுறை அட்டவணையில் தேடியும் காணாததால் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.63 அவர்கள் தூய்மையிலும் தூய்மையான பொருள்களை ஊரிம், தும்மிமைக் காட்டுவதற்கு ஒரு குரு வரும்வரை உண்ணக்கூடாது என்று ஆளுநர் அவர்களிடம் கூறினார்.64 மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று அறுபது.65 அவர்களைத் தவிர அவர்களின் ஆண், பெண், ஊழியர்களின் எண்ணிக்கை, ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மேலும் அவர்களுடன் இருநூறு பாடகர்களும், பாடகிகளும் இருந்தனர்.66 அவர்களின் குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு: கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.67 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து: கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.68 குலத் தலைவர்களில் சிலர் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்திற்கு வந்து, கடவுளின் கோவிலை அதே இடத்தில் கட்டி எழுப்பத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக் கொடுத்தனர்.69 அவர்கள் ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப, ஐநூறு கிலோகிராம் பொன்னும், மூவாயிரத்து நானூற்று இருபத்தைந்து கிலோகிராம் வெள்ளியும், நூறு குருத்துவ ஆடைகளும் கொடுத்தார்கள்.70 குருக்கள், லேவியர், வேறு சிலர், பாடகர், வாயிற்காப்பாளர், கோவில் ஊழியர் ஆகியோர் தம் நகர்களிலும், எல்லா இஸ்ரயேலருள் ஏனையோரும் தம் நகர்களிலும் குடியேறியிருந்தார்கள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!