† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

எருசலேமே! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5, 6 – 7, 8 – 9 இந்த திருப்பாடல் முழுவதும் எருசலேம் நகரைப்பற்றியும் அதன் மேன்மையையும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது. எருசலேம் என்பது சாதாரண நகர் மட்டுமல்ல. அது இஸ்ரயேல் மக்களின் அடிநாதம். இஸ்ரயேல் மக்களின் உயிர்முடிச்சு. எப்போதெல்லாம் எருசலேம் நகருக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களின் இதயத்தில் வலி பெருக்கெடுத்து ஓடும். அந்த எருசலேம் நகரத்தின் மகிமையை, மகத்துவத்தைப் போற்றக்கூடிய பாடலாக இந்த திருப்பாடல் முழுவதும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. எருசலேம் இவ்வளவு மகிமைக்கு உரியதாக விளங்குவதற்கு காரணம் என்ன? எருசலேமில் கடவுள் குடிகொண்டிருக்கிறார். கடவுளின் பிரசன்னம் எருசலேம் நகரில் இருக்கிறது. எருசலேம் கடவுளின் பாதுகாப்பில் இருக்கிற நகரம். எனவே, யாரெல்லாம் எருசலேமில் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருமே இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் நிறைவான ஆசீரைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எருசலேம் நகரில் இருக்கிறவர்களுக்கு கடவுளே...

READY TO GREET HIM WHEN HE COMES

“You must be prepared in the same way. The Son of Man is coming at the time you least expect.” –Matthew 24:44 Happy Advent! Advent is about the three comings of Christ: 1) Jesus first came to earth as a Baby, humble and lowly, at Bethlehem (Lk 2:4ff). 2) Jesus will come again at His Second Coming on the last day (Mt 24:30-31). This coming will be as majestic as His first coming was humble (1 Thes 4:16; Lk 21:27). 3) The third coming of Jesus is the coming of the Eucharistic Jesus into our souls today. Jesus’ coming in...

இறைவனின் வருகையும் நமது வாழ்வும்

திருவருகைக்காலத்தின் முதல் வாரத்தில் இருக்கிறோம். கடந்த வழிபாட்டு ஆண்டை நேற்றோடு நிறைவு செய்திருக்கிறோம். புதிய ஆண்டை இன்றோடு தொடங்குகிறோம். ஏறக்குறைய நமது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்தது இது. கடந்த ஆண்டு முழுவதும் இயேசுவின் பிறப்பு, போதனை, நமக்காக இறந்து உயிர்த்து, விண்ணகம் சென்று, அனைத்துலக அரசராக அவரை நிலைநிறுத்திக்கொண்டதை தியானித்து நம்மையே புதுப்பித்துக்கொண்டிருக்கிறோம். மற்றொரு புதுப்பித்தலுக்கான தொடக்கம் தான் இன்றைய திருவருகைக்காலத்தின் முதல் வாரம். இந்த நாளிலே நாம் அனைவரும் சிந்திப்பது புதிய ஆண்டிற்கான தயாரிப்பு மட்டுமல்ல. பழைய ஆண்டு எந்தளவுக்கு நம்மைப் பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்வதும் தான். இயேசுவின் வாழ்வு முழுவதையும் அறிந்து தியானித்திருக்கிற நாம், எப்படி அவரது வாழ்வை நமது வாழ்வாக மாற்றியிருக்கிறோம்? அல்லது மாற்ற முயற்சி எடுத்திருக்கிறோம்? அதிலே எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம்? அல்லது சறுக்கியிருக்கிறோம்? இந்த கேள்விகளை நாம் மீண்டும், மீண்டுமாகக் கேட்டுப்பார்த்து, அதற்கான பதில்களையும் நாம் காண முயல வேண்டும்....

ASLEEP WITH ANXIETY?

“Beware that your hearts do not become drowsy from carousing and drunkenness and the anxieties of daily life, and that day catch you by surprise like a trap.” –Luke 21:34-35, RNAB Jesus connects two very different things in today’s Gospel passage: drowsiness and anxieties (Lk 21:34, RNAB). Generally, anxiety would seem to be associated with sleeplessness rather than drowsiness. Cares and worries tend to keep us awake rather than lull us to sleep. Yet Jesus, in His wisdom, links anxiety with spiritual slumber. He classifies anxiety as a drug that blinds us to the need for spiritual preparation. When Jesus...

இறைவனின் உடனிருப்பு

திருவெளிப்பாடு 22: 1 – 7 வழிபாட்டு ஆண்டினுடைய இறுதிநாட்களில் கொடுக்கப்படுகிற வாசகங்கள் பெரும்பாலும், திருவெளிப்பாடு நூலை மையப்படுத்தியதாக இருக்கிறது. இந்த திருவெளிப்பாடு புத்தகம் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அந்த காட்சிகளில் வெளிப்படும் உருவகங்கள் உலக முடிவை நமக்கு அறிவிப்பதாக அமைந்திருக்கின்றன. எதற்காக உலக முடிவு மற்றும் அழிவு சார்ந்தவை இந்த நாட்களில் நமக்குத் தரப்படுகின்றன? நம்மை பயமுறுத்துவதற்காகவா? வாழ்வு தரக்கூடிய இறைவார்த்தை, அழிவு தொடர்பானவற்றை வெளிப்படுத்துவதேன்? அனைத்துலக அரசராக கிறிஸ்து இயேசு திருவிழாவை கொண்டாடியிருக்கிற நாம், கிறிஸ்து அரசருடைய ஆட்சி எப்படி அமைவதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இப்படிப்பட்ட வாசகங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கண்டிப்பாக இருளின் ஆட்சி நிறைவுக்கு வரும் என்பதையும், ஒளியின் ஆட்சியை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அமைப்பார் என்கிற நம்பிக்கைச் செய்தியையும் இது வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடவுளின் அரசு அனைவருக்கும் வாழ்வளிப்பதற்காக அமைய இருக்கிறது. இந்த அரசில் தகுதி பெறுவதற்கு, நாம்...