Category: Daily Manna

வாழு! வாழ வை!

மாற்கு 10:17-27 செல்வர்களுக்கு எதிரான சங்கினை இன்றைய நற்செய்தியில் கேட்க முடிகின்றது. செல்வர்களின் மனநிலையை மிக அழகாக இன்றைய நற்செய்தியில் படம் பிடித்துக்காட்டியுள்ளார். நற்செய்தியாளர் மாற்கு. தன்னிடம் வந்த செல்வந்தரை நிலைவாழ்வினை நோக்கி படிப்படியாகக் கூட்டிச் செல்கின்றார் இயேசு. உண்மையாக நமக்குத்தான் இந்தப் படிகள் ஒரு பாடம். நிலை வாழ்வினைப் பெருவதற்கு முதல் படிநிலை கட்டுப்பாடற்ற, ஏனோதானோமாக, தன் விருப்பபடியெல்லாம் வாழாமல் கட்டளைகளைக் கடைபிடித்து நிலை வாழ்விற்குக் கடந்து செல்ல வேண்டும். இது ஒரு குமுகக் கடமை என்பதோடு நிறைவு பெறுகின்றது. இந்த முதல்படியில் தன்னால் பிறருக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை என்பதோடு முடிகின்றது.ஆனால் இது நிறைவன்று. நிறைவு என்பது தன்னால் பிறருக்கு என்ன நன்மை என்பதில்தான் அடங்கியிருக்கிறது. இதைத்தான் இயேசு அந்த செல்வரிடம் கேட்கிறார். “உன்னால் யாருக்கும் பிரச்சனை இல்லை, நன்று. ஆனால் உன்னால் யாருக்கு என்ன நன்மை?” என்கிறார். இந்தக் கேள்வியை நாம் இன்று பலதளத்தில் கேட்க முடியும். நாம்...

அவரா(லா)கிட…

சீ.ஞா. 27 : 4-7, 1கொரி.15: 54-58, லூக்.6: 39-45. ஒருவர் தன் மகளுக்குத் திருமணம் செய்து அவரைத் தன் மருமகனிடம் ஒப்படைத்து “மாப்பிள்ளை என் மகளுக்கு கொஞ்சம் வாய் நீளம் அவளைக் கவனிச்சுக்கோங்க” என்றார். அதற்கு மருமகன் மாமனாரிடம், கவலைப்படாதீர்கள், நான் அவளை நன்றாகக்கவனித்துக் கொள்வேன் எனக்குக் கொஞ்சம் கை நீளம்” என்றாராம். ஆம், அன்பானவர்களே இன்றைய வாசகங்கள் மூன்றும் நம் வார்த்தைகள் எப்படியிருக்க வேண்டும்? நம் வார்த்தைகள் நன்றாக இருக்க நம் உள்ளம் எப்படியிருக்க வேண்டும்? என்பதைப்பற்றி நமக்கு எடுத்துரைக்கிறது. நாவடக்கம் மிகவும் முக்கியம் என்பதால்தான் வள்ளுவப் பெருந்தகை இதற்கெனத் தனி அதிகாரத்தையே உருவாக்கியுள்ளார். எடுத்துகாட்டாக, இனியவை கூறல், புறங்கூறாமை, சொல்வன்மை. இதில் முத்தாய்ப்பாக பயனில்லாத சொற்களைப் பேசுபவரை மனிதரில் பதர் என்று முத்திரைக் குத்துகிறார் நம் பாட்டன். “பயன்இல் சொல்பாராட்டுவானை மகன் எனல் மக்கள் பதடி எனல்” (குறள் – 196) ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஒரு சக்தி...

ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போருக்கு பேரன்பு நிலைத்திருக்கும்

திருப்பாடல் 103: 13 – 14, 15 – 16, 17 – 18 பழைய ஏற்பாட்டிலே கடவுள் இஸ்ரயேல் மக்களோடு ஏழு உடன்படிக்கைகளைச் செய்துகொண்டார் என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். கடவுள் நமது முதல் பெற்றோரோடு செய்து கொண்டது முதல் உடன்படிக்கை. தொடக்கநூல் முதல் அதிகாரத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்து, இந்த உலகத்தை அவர்களது பராமரிப்பில் விட்டுவிடுகிறார். இரண்டாவதாக, நோவாவோடு கடவுள் உடன்படிக்கைச் செய்துகொள்கிறார். இனிமேல் இந்த மண்ணகத்தை நீரால் அழிக்க மாட்டேன் என்று உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். மூன்றாவதாக, ஆபிரகாமோடு கடவுள் உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். ஆபிரகாமுக்கு பல வாக்குறுதிகளைக் கடவுள் கொடுக்கிறார். ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கும் அவா் வாக்குறுதிகளைக் கொடுக்கிறார். நான்காவதாக, அவர் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை ”பாலஸ்தீன அல்லது நில உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகிறது. இது இணைச்சட்டம் 30: 3 – 4 ல், தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடவுள் உலகின் அனைத்து மூலைகளிலும்...

உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்

திருப்பாடல் 119: 12, 16, 18, 27, 34, 35 கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை வழங்கினார். இந்த கட்டளைகள் பத்து கட்டளைகளாக தரப்பட்டிருந்தாலும், அந்த கட்டளைகள் காட்டும் நெறிமுறைகளாக நாம் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் அன்பு. இந்த அன்பு என்கிற நெறிமுறையின் அடிப்படையில் தான் அனைத்து கட்டளைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். உதாரணமாக, “களவு செய்யாதிருப்பாயாக” என்பது பத்துக்கட்டளைகளுள் இருக்கக்கூடிய ஒரு கட்டளை. வெளிப்படையாக இது அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதாக இருந்தாலும், சற்று ஆழமாக நாம் சிந்தித்துப்பார்க்கிறபோது, அதனுள் இருக்கிற உண்மையான பொருளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு பொருளை உழைத்து ஒருவர் சம்பாதிக்கிறார். அந்த பொருள் அவருக்குரியது. அவருடைய உழைப்பில் நாம் பெறக்கூடியது. மற்றவரின் பொருளை நாம் திருடுகிறபோது, அவரிடத்தில் நமக்கு அன்பு இல்லை என்பதுதான் உண்மையான அர்த்தம். அந்த மனிதரிடத்தில் நமக்கு...

நற்பேறு பெற்றவர் யார்?

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6 நற்பேறு பெற்றவர் யார்? என்கிற கேள்வியோடு தொடங்குகிறது இன்றைய திருப்பாடல். நற்பேறு என்கிற வார்த்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. உள்ளத்தின் நிறைவை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. நமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நாம் எப்படி வாழ வேண்டும்? என்று அழைப்புவிடுக்கிற வார்த்தை. இந்த உலகத்தில் வாழும் அனைவருமே மகிழ்ச்சியான வாழ்விற்கு என்ன செய்ய வேண்டும்? என்று தான் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். அத்தகைய மகிழ்ச்சியான வாழ்விற்கு அழைப்பு விடுப்பதுதான் இந்த திருப்பாடல். பொல்லாரின் சொல்லோ, வாழ்வோ நம்மை நெருங்காதபடிக்கு பார்த்துக்கொண்டால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்வாக அமைந்துவிடும் என்பதுதான், ஆசிரியரின் தீர்வாக இருக்கிறது. இன்றைக்கு பொல்லாரைத் தேடி சிறைக்கே செல்லக்கூடிய கேவலமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொல்லார் என்று தெரிந்திருந்தும், சுயநலத்திற்காக, சுயஇலாபத்திற்காக, மானத்தை விட்டு, வெட்கத்தை விற்று, வாழ்வை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே காற்று...