Category: Daily Manna

நான் பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தைப் பற்றிப் பேசுகிறது. யோவான் கைது செய்யப்பட்டதை அறிந்த இயேசு, தமது நற்செய்தி அறிவிப்புப் பணியைத் தொடங்குகிறார். “கற்பித்தார், நற்செய்தியைப் பறைசாற்றினார், நோய்நொடிகளைக் குணமாக்கினார்”. இந்த நற்செய்திப் பகுதியுடன் தொடர்பு கொண்டதாக அமைகிறது இன்றைய திருப்பாடல். அரசத் திருப்பாடல்களுள் ஒன்றான திபா 2 “கடவுள் தேர்ந்துகொண்ட அரசர்” என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. அதன் 8ஆம் வசனம் “பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்” என்பதே இன்றைய பல்லவி. அதன் தொடர்ச்சியாக “பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்” என்றும் வாசிக்கிறோம். இஸ்ரயேலரின் அரசர்களில் ஒருவரைப் பற்றிப் பாடப்பட்ட இந்தத் திருப்பாடல் இப்போது மெசியாவாம் இயேசுவின்மீது ஏற்றிப் பாடப்படுகிறது. குறிப்பாக, “நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” (2:7) என்னும் வரிகள் இயேசுவையே குறிக்கின்றன. திருத்தூதர் பணிகள் நூலில் அந்தியோக்கு நகரின் தொழுகைக்கூடத்தில் பவுல் ஆற்றிய மறையுரையில் “இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக...

திருக்காட்சிப் பெருவிழா

திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர். அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது. இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள்...

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்

இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும் கடவுளை ஆர்ப்பரித்து வாழ்த்த வேண்டும் என்று இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. கடவுளை வாழ்த்துவதற்கு என்ன காரணங்களை ஆசிரியர் கூறுகிறார்? மூன்று பண்புகளை நாம் கடவுளை வாழ்த்துவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. அதுதான் ஐந்தாம் இறைவார்த்தையில் நாம் பார்க்கிறோம்: ”ஆண்டவர் நல்லவர், என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு, அவர் தலைமுறைதோறும் நம்பத்தக்கவர்”. இந்த மூன்று பண்புகளை இன்றைய நாளில் நாம் சிந்திப்போம். கடவுள் நன்மைகளைச் செய்யக்கூடியவராக இருக்கிறார். மக்கள் எவ்வளவுதான் நன்றியுணர்வு இல்லாமல் வாழ்ந்தாலும், கடவுள் அதனை ஒரு பொருட்டாக நினைத்து, மக்களுக்கு தீமை செய்ய முற்படுவதில்லை. நன்மை செய்வது ஒன்றையே அவர் இலக்காக வைத்திருக்கிறார். 2. கடவுளின் அன்பு எந்நாளும் மக்களுக்கு இருக்கிறது. கடவுளின் அன்புக்கு மக்கள் தகுதியற்ற நிலையில் இருந்தாலும், கடவுள் மக்களை தொடர்ந்து அன்பு செய்கிறவராக இருக்கிறார். அவரது அன்பு தாயன்பிற்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்படுகிறது. ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளை எல்லா நிலைகளிலும்...

ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்

ஆண்டவர் முன்னிலையில் நாம் மகிழ்ந்து பாட இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? நமது மகிழ்ச்சிக்கு எது காரணம்? ஆண்டவர் வர இருக்கின்றார் என்கிற செய்திக்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். எதற்காக ஆண்டவர் வர இருக்கின்றார்? இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு மெசியாவின் வருகை. அடிமைப்பட்டுக்கிடந்த இஸ்ரயேலுக்கு விடுதலையை வழங்கவும், அநீதியால் மலிந்து போயிருந்த உலகத்தை, நீதியோடு ஆட்சி செய்யவும் இஸ்ரயேல் மக்கள் மெசியாவை எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் வருகிறது, எனவே, அனைவரும் இதனை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று ஆசிரியர் நமக்கு அழைப்புவிடுக்கிறார். இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவை தாங்கள் பார்த்ததாக யோவானின் சீடர்கள் சான்று பகர்வதை இன்றைய நற்செய்தியும் நமக்கு எடுத்துக்கூறுகிறது. இது இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதையும், கடவுள் தன்னுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதையும், இது மகிழ வேண்டிய நேரம் என்பதையும் நமக்கு அறிவிக்கக்கூடிய...

மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்

திருப்பாடல் 98: 1- 6 ஆண்டவரை வாழ்த்த வேண்டும், போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்பவிடுக்கிறார். எதற்காக கடவுளைப் போற்ற வேண்டும்? ஏனென்றால், அவர் இந்த உலகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடுதலையை நமக்குத்தந்திருக்கிறார். இங்கே விடுதலை என்று சொல்லப்படுவது என்ன? எந்த விடுதலையை ஆசிரியர் இங்கே கோடிட்டுக்காட்டுகிறார்? தொடக்கநூலில் (1: 31) நாம் பார்க்கிறோம்: ”கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாக இருந்தன”. தொடக்கத்தில் இருந்த இந்த ஆரோக்யமான நிலை தொடரவில்லை. அது மனிதனின் கீழ்ப்படியாமையால் இழந்துபோனதாக மாறியது. மனிதனின் தவறால் தீமை இந்த உலகத்திற்குள் நுழைந்தது. தான் படைத்த மனிதனே இப்படி தீமை நுழைவதற்கு காரணமாகிவிட்டானே என்று, கடவுள் கோபம் கொண்டு மானுட சமுதாயத்தை புறந்தள்ளி விடவில்லை. இழந்து போனதை மீட்டெடுக்க வாக்குறுதி கொடுக்கிறார். அந்த எதிர்கால விடுதலையை இறைவாக்கினர் வாயிலாக முன்னறிவிக்கிறார். அந்த விடுதலையைத்தான் இந்த திருப்பாடலில் நாம்...