Category: Daily Manna

கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை

”தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதனை இழந்துவிடுவர். தம் உயிரை இழப்பவரோ அதனை காத்துக் கொள்வர்” என்று இயேசு சொல்கிறார். இதனுடைய அர்த்தம் என்ன? இந்த உலகத்தில் உயிர் வாழ வேண்டும்? என்கிற எண்ணம் எல்லாருக்குமே இருக்கிறது. சாவைப்பற்றிய பயமும் அனைவருக்கும் இருப்பது இயல்பே. ஆனாலும், இந்த பயத்திற்கு நடுவில் நீதிக்காக, நேர்மைக்காக தங்களது உயிர் எந்த நேரமும் போகலாம் என்ற பயம் இருந்தாலும், தொடர்ந்து அதே உறுதியோடு இருப்பவர்களைத்தான் இயேசு தம் உயிரை இழப்பவர்களாக சொல்கிறார். அவர்கள் நிச்சயம் விண்ணகத்தின் வாயிலை அடைந்துவிடுவார்கள். தங்கள் நிலையான வாழ்வைக் காத்துக்கொள்வார்கள். இயேசுவின் வாழ்க்கையைப் பாருங்கள். இயேசு நீதிக்காக, நியாயத்திற்காக குரல் கொடுத்தார். அதன்பொருட்டு அவருடைய உயிர் எப்போது வேண்டுமானாலும் போகும் நிலை இருந்தது. அதற்கான பயமும், கெத்சமெனி தோட்டத்தில் எழுகிறது. ஆனாலும், தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அது தான் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது. இந்த உலகத்தில் உயிரைக்காத்துக்கொள்ள வேண்டும்...

போரிட்டால் தான் இறையாட்சி இயங்கும்

லூக்கா 17:20-25 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நம் நடுவே இருக்கிற இறையாட்சியை அமல்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு நாம் போரிட வேண்டும். இறைவனை மட்டுமே நினைத்தவாறு போரிட்டு அலகையின் ஆசைகளின் மீது வெற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு விதத்திலே போரிட்டு இறையாட்சியை அமல்படுத்த அவரசமாய் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கின்றது. 1. அமைதிப்போர் நம் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் தீமைகளை விரட்டுவதற்கு போராட வேண்டும். இந்த போரும் கடினமான போர் தான். இதை தினமும் தியானித்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மெளனமாக வெற்றிக்கொள்ள வேண்டும். மெளனமாக தியானித்து நம்மை வெற்றிக்கொள்வதால் இது மெளனப்போர் என அழைக்கப்படுகிறது. 2. அரட்டும் போர் நம் வாழுமிடங்களில் மனிதர்கள்...

நோ்ந்தளியுங்கள்… நேராகுங்கள்

நோ்ந்தளியுங்கள்… நேராகுங்கள் யோவான் 2:13-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு திருவிழா திருப்பலி நம்மை கடவுளுக்கு நேர்ந்தளிக்க அழைப்பு கொடுக்கிறது. நாம் அனைவரும் கடவுளுக்கே சொந்தம் என்பதை ஆலயத்தில் அறிக்கையிட வேண்டும். உரக்க அதை வெளியிட வேண்டும். அதற்கான வாய்ப்பாக இந்த நாளை பயன்படுத்துவோம். இன்று ஆலயம் வந்திருக்கின்ற நாம் அதை முழு ஆர்வத்தோடும் ஆசையோடும் செய்வோம். அதுதான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஆலயத்தில் நேர்ந்தளிக்க வேண்டும். அப்படி ஆலயத்திற்கு நம்மை நேர்ந்தளிக்கும் போது இரண்டு விதங்களில் நாம் பயன் பெறுகிறோம். 1. பாதுகாப்பு பெறும் வளையம் உருவாகிறது நாம் ஆண்டவருக்கு ஆலயத்தில் வைத்து நம்மை நேர்ந்தளிக்கும்...

என் கடன் பணி செய்து கிடப்பதே

லூக்கா 17:7-10 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இந்த உலகில் படைக்கப்பட்ட நாம் பல்வேறு விதமான பணிகளைச் செய்ய வேண்டும். பலருக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம். கடவுள் நம்மை படைத்து பாசத்தோடு பராமரித்து வருவதற்கு அவருக்கு பல விதமான பணிகளைச் செய்ய வேண்டும். நம் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல நல்ல உள்ளங்கள் நம் வாழ்வில் ஏணிகளாக இருந்திருகிறார்கள். இப்போதும் நமக்கு உறுதுணையாக இருந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நாம் கடன்பட்டிருக்கின்றோம். பல விதமான பணிகளைச் அவர்களுக்காக கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நம் பிறப்பு முழுமையடைகிறது. பிறருக்கு நாம் பணிகள் செய்யும்போது இரண்டு சிந்தனைகளை நம் சிந்தைனையில் நிறுத்துவது சிறப்பு. 1. கடன் என்னுடன்...

எச்சரிக்கை: யாரையும் பாவத்தில் தள்ள வேண்டாம்

லூக்கா 17:1-6 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் இருக்கும் இடங்களில் குற்றங்கள், வன்முறைகள், பாவங்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. எங்குப் பார்த்தாலும் பாவம் செய்யும் கும்பல் குவிந்துக்கொண்டு இருக்கின்றது. யார் காரணம் இதற்கு? அவர்களே கற்றுக்கொண்டார்களா? இல்லை. பிறர் கற்றுக்கொடுத்தார்கள். நண்பர்களிடமிருந்து, பணிசெய்யுமிடங்களிலிருந்து, உறவினர்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் அது. இப்படி பிறருக்கு தவறான பண்புகளை கற்றுக்கொடுப்போரை இன்றைய நற்செய்தி வாசகம் எச்சரிக்கிறது. பிறரை பாவத்தில் தள்ளி விடுவோரை வன்மையாக கண்டிக்கிறது. நம்மால் யாரும் கெட்டுப்போகாத வாழ்க்கையை நாம் நடத்த வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? இரண்டு காரியங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 1. பாவச்சோதனை கொடுக்க கூடாது பலர் தங்களோடு இருக்கும் நண்பர்களுக்கு பாவச்சோதனையை வழங்குகிறார்கள....