Category: Daily Manna

அனைத்துப் புனிதர்கள் பெருவிழா

சாதாரணமானது ஆனால் வரலாறானது மத்தேயு 5:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் புனிதர் அனைவரின் பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து புனிதர்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக! மனிதர்கள் என நாம் மரியாதை செலுத்துவோர் தங்களுடைய வாழ்வையும் பணியையும் முழுமையாக இறைசித்தத்திற்கு அர்ப்பணித்து துன்பங்களை, இன்பங்களாக ஏற்று, உலக மக்களின் நலனுக்காகவும், அவர்கள் நெறிபிறழாமல் வாழ வழிகாட்டிகளாக இவ்வுலகில் வாழ்ந்தவர்கள். இவர்களையே கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்கள் என அடையாளப்படுத்துகிறது. கடவுளை வழிபடுகிற நாம், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காகப் பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது மேலான கடமையாகும். அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்விற்கு நன்றி கூறுவது தகுதியும் நீதியுமாகும். இவ்விழா நாம் புனித வாழ்விற்குள் நுழைய...

செய்துப் பாருங்கள்… என்ன நடக்கிறது பாருங்கள்…

லூக்கா 14:12-14 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவர் இயேசுவின் பணி, பாணி மிகவும் வித்தியாசமானது. ஒவ்வொன்றும் ஆச்சரியத்தை உருவாக்கக்கூடியவை. அந்த வகையில் இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் வியப்பூட்டும் போதனைக்கு எடுதுத்துக்காட்டாக அமைகிறது. நீங்கள் விருந்திற்கு அழைக்கும் போது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றவரையும் அழையுங்கள் என்கிறார் இயேசு. ஏன்? அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. ஒன்றும் இருக்காது ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றவரையும் திருமண விருந்திற்கு அழைக்கும் போது அவர்களிடம் திருப்பி உதவி செய்ய ஒன்றும் இருக்காது. அதுதான் திருமண விருந்து. விருந்து எதிர்பார்த்து செய்வது அல்ல. மாறாக எதிர்பார்க்காமல் கொடுப்பது. இந்த விருந்தே இறைவன் எதிர்பார்க்கும்...

சக்கேயுவின் தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை என்பது இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் காணப்படக்கூடிய மிக்பெரிய பலவீனமாக நாம் சொல்லலாம். அந்த மனநிலை தான், விளையாட்டு வீரர்கள், சினிமாக நடிகர்களை தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளவும், சில சமயங்களில் உயிரைக் கொடுக்கவும் தூண்டுகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை சில சமயங்களில் ஒருவிதமான போதையாகவும் மாறிவிடுகிறது. இந்த தாழ்வு மனப்பான்மையை அகற்றுவதற்கு, நமக்கு இரண்டு விதமான ஆற்றல்கள் தேவைப்படுகிறது. ஒன்று, நமது முயற்சி. இரண்டாவது கடவுளின் அருள். இந்த இரண்டையும் பெற்று, முழுமையான மனிதனாக, தனது பலவீனங்களை கடந்த மனிதனாக, சக்கேயு உயிர்பெற்று எழுகிறான். சக்கேயுவிற்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை. அவனுடைய உயரம் அவனுக்குள்ளாக தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. அவனது வரிவசூலிக்கும் தொழில் காரணமாக, சமுதாயத்தில் இருந்து புறந்தள்ளப்பட்ட மனிதனாக காணப்படுகிறான். அதிலிருந்து விடுபட முயற்சி எடுக்கிறான். அந்த முயற்சி அவனுக்கு வெற்றியாக மாறுகிறது. தனது பலவீனத்திலிருந்து மீண்டு வருகிறான். கடவுளின் அருளையும் ஆசீரையும் நிறைவாகப் பெற்றுக்கொள்கிறான். சக்கேயு தனது...

தற்பெருமை அல்ல அடுத்தவர் பெருமையே!

லூக்கா 14:1,7-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். தான் என்ற அகங்காரம் மனிதர்களுக்கு வருவதால், அவர்கள் சிறுமை யடைகிறார்கள் மேலும் அருகிலிப்பவர்களாலே அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். இந்தத் தற்பெருமை மனிதனை இறைநிராகரிப்பில் தள்ளி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே இன்றைய நற்செய்தி வாசகம் தற்பெருமை வேண்டாம். மாறாக தாழ்ச்சியே வேண்டும் என்ற தலையாய பாடத்தோடு வருகிறது. தற்பெருமை வந்தால் பல தீமைகள் விரைவாக வந்து நமக்குள் குடிகொள்கின்றன. அவற்றுள் இரண்டு. 1. நடிப்பு மனிதர்கள் தங்களுடைய ஒவ்வொரு செயலையும் செய்யும் போது அதில் தூய்மையான எண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அவர்கள் செய்யக் கூடிய கடுகளவு நன்மையானாலும் அது இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்....

சொல்லுமில்லை, பேச்சுமில்லை

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 இயற்கையின் சிறப்பை, கடவுளின் கைவண்ணத்தை திருப்பாடல் ஆசிரியர் புகழ்ந்து பாடுகிறார். மனிதர்கள் அதிகமாக பேசுகிறார்கள். தங்களை எப்போதும் உயர்வாகவே பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய வார்த்தைகளுக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகளை அவர்களின் பேச்சோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, சொற்கள் தான் அதிகமாக இருக்கிறது, செயல்பாடுகள் சொல்லக்கூடிய அளவில் இல்லை. திருப்பாடல் ஆசிரியர் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடமாக நமக்கு மிகப்பெரிய செய்தியைத் தருகிறார். இயற்கைக்கு சொல்லுமில்லை, பேச்சுமில்லை. ஆனால், தங்களுடைய செயல்பாடுகளால் அவை கடவுளின் மாட்சிமையை பறைசாற்றுகின்றன. கடவுளுக்கு தங்களது நன்றியுணர்வை எடுத்துரைக்கின்றன. கடவுளைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, கடவுள் தங்களுக்கு கட்டளையிட்டவாறே பணிகளைச் செய்து முடிக்கின்றன. தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து முடிக்கின்றன. அவற்றைச் செய்து முடிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றன. நம்முடைய வாழ்வில், நாம் பேசுகிற வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டு நன்றிக்குரியவர்களாக வாழ்வோம். நம்முடைய செயல்பாடுகள் நம்முடைய...