Category: Daily Manna

அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5 ”அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை தாவீது அரசர் காலத்தில் தான், மக்கள் அதிகமாக உணர்ந்தனர். அதற்கு தாவீதின் முயற்சியும் ஒரு காரணம், யெருசலேம் நகரை, கடவுளின் நகரமாக மாற்றியதில், தாவீதின் பங்கு மிக அதிகம் உண்டு என்பதில், மாற்றுக்கருத்து இல்லை. மக்களை ஒன்றிணைக்க, யெருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும் என்பதில், அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்த திருப்பாடல் இந்த பிண்ணனியில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் பல திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த திருவிழாக்களை எருசலேமில் கொண்டாடினர். திருவிழாக்களைக் கொண்டாடுவதற்காக அவர்கள் எருசலேம் வருகிறபோது பாடுகிற பாடலாக இந்த பாடல் அமைந்திருக்கிறது. எருசலேம் என்பதை, நம்முடைய புரிதலில் விண்ணக வீடாக எடுத்துக்கொள்ளலாம். விண்ணகம் தான் நமது நிலையான இல்லம். அந்த விண்ணக இல்லத்தில் நுழைவதைத்தான் நாம் நமது வாழ்வின் இலக்காகக்...

நல்ல சிந்தனைகளை வரவேற்போம்

தொழிலாளர் புனித யோசேப்பு இந்த உலகத்தில் பல மனிதர்களால் கொடுக்கப்பட்ட நல்ல கருத்துக்கள், நல்ல சிந்தனைகள், இருளையே ஒளியாக மாற்றக்கூடியப் போதனைகள் மண்ணோடு மண்ணாகப்புதைக்கப்பட்டிருக்கிறது. காரணம், கருத்துக்களைப்பார்க்காமல், யாரிடமிருந்து அந்த கருத்து வருகிறது? என்று ஒருவிதமான இறுகிய உள்ளத்தோடு இருக்கக்கூடிய நிலைமை. உண்மையை அறிய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், பகைமையையும், வெறுப்பையும் மட்டுமே அளவுகோலாகப் பார்க்கும் மனநிலை. இயேசுவின் போதனை படிக்காத பாமரர்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏழைகளுக்கும் அடிமைப்படுத்தப்பட்டு நொறுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலையைப்பெற்றுத் தருவதாகவும், வாழ்வின் அர்த்தத்தை அறிந்து கொள்வதற்கு உதவியது. ஆனால், படித்தவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. செய்தியை உள்வாங்காமல், இறுகிய மனத்தோடு அவர்கள் இருந்ததே காரணம். அவர்கள் இயேசுவின் கருத்துக்களையோ, அதில் பொதிந்திருக்கின்ற உண்மையையோப் பார்க்கவில்லை. இயேசுவின் கருத்துக்கள் தங்களின் வாழ்விலும் ஒளியேற்றும் என்றும் அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் இயேசுவை மட்டுமே பார்த்தனர். அதுவும் அவரை விரோதியாக மட்டுமே பார்த்தனர்....

வாழ்க்கை என்னும் கொடை

திருத்தூதர் பணி 14: 5 – 18 வாழ்க்கை என்னும் கொடை தனி மனித வழிபாடு, நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு, இன்றைய வாசகம் அருமையான எடுத்துக்காட்டு. பவுல் மற்றும் பர்னபா ஆகிய இருவரும், மக்கள் நடுவில் சென்று, நோய்களை குணமாக்குகின்றனர். முடவர்களை நடக்கச் செய்கின்றனர். அதனைக்கண்டு அவர்களை வழிபடுவதற்காக, அவர்களுக்கு பலி செலுத்துவதற்காக ஒரு கூட்டம் அவர்களிடத்தில் வருகிறது. அதனைப் பார்த்து, பவுலும், பர்னபாவும் அதனை புறக்கணித்துவிட்டு, அவர்களை கண்டிக்கின்ற விதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். பணம் கொடுத்து விளம்பரங்களை தேடிக்கொள்ளும் இந்த உலகத்தில், இறைவன் ஒருவர் தான் மகிமைப்படுத்தப்பட வேண்டியவர் என்பதில், உறுதியாக இருந்து அதனை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் பவுலடியார். உண்மைதான். இறைவனுக்காக அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன் என்று வெறும் வார்த்தையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் நிறைவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். புறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே...

நானே உண்மையான திராட்சைச்செடி

இயேசு திராட்சைச் செடியைப்பற்றிப் பேசுகிறபோது, திராட்சைச்செடியைப்பற்றி நன்றாக அறிந்தவராகப்பேசுகிறார். பாலஸ்தீனத்தின் அனைத்துப்பகுதிகளிலும் திராட்சைச்செடி வளர்க்கப்படுகிறது. திராட்சைச்செடியை வளர்க்கிறபோது, அதற்கான தனிக்கவனம் செலுத்த வேண்டும். திராட்சைச்செடி தன் வசதிக்கு ஏற்றாற்போல கொடிகளைப்படரவிட்டாலும், அது நல்லமுறையில் வெட்டப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதனால் பயன் ஒன்றும் இல்லை. இயேசு இந்த உவமையை யாருக்குச்சொல்கிறார்? இரண்டு விளக்கங்கள் தரப்படுகிறது. முதலாவதாக, யூதர்களைப்பார்த்து இந்த உவமையைச்சொல்லியிருக்கலாம். ஏனென்றால், இஸ்ரயேல் இனம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். பழைய ஏற்பாடு முழுவதும் இஸ்ரயேல் இனம் திராட்சைச்செடியோடு ஒப்பிடப்படுகிறது. அது கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக இருந்தாலும், தன்போல வளரமுடியாது. அவ்வப்போது கடவுள் இறைவாக்கினர் வழியாக, இஸ்ரயேல் இனம் மற்ற இனங்களுக்கு ஆசீயாக இருக்கும் வண்ணம் கண்டித்து திருத்துவார். அப்படி திருந்தாதவர்கள், அதற்கான தீர்ப்பைப்பெறுவார்கள். இரண்டாவது, அது கிறிஸ்தவர்களுக்காகவும் எழுதப்பட்டிருக்கலாம். கிறிஸ்தவர்களில் பலர், தொடக்ககாலத்தில், பெயரளவு கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும் என்ற அழைப்பு இதன் மூலமாக தரப்படுகிறது....

இறைவனோடு கொண்டிருக்கிற உறவு

திருத்தூதர் பணி 13: 44 – 52 இறைவனோடு கொண்டிருக்கிற உறவு யூதர்களில் பெரும்பாலானவர்கள் பவுலையும், திருத்தூதர்களின் போதனையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பலர் மனந்திரும்பி, இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டாலும், அதிகாரவர்க்கத்தினர் அவர்களை நம்பவில்லை. எந்தெந்த வழியில் அவர்களுக்கு இன்னல்களை தர முடியுமோ, அத்தனை வழிகளிலும் அவர்கள் முயற்சி எடுத்து, அவர்களை தடை செய்ய பார்த்தார்கள். அதிகாரவர்க்கத்தினரின் இந்த மிரட்டல்களைக் கண்டு, சீடர்கள் பயப்படவில்லை. ஒளிந்து ஓடவுமில்லை. அதிகாரவர்க்கத்தினரை துணிவோடு எதிர்த்து நின்றனர். ”கடவுளின் வார்த்தையை உதறித்தள்ளி, நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள்” என்று பவுல், யூதர்கள் முன்னிலையில் துணிவோடு பேசுகிறார். இவ்வளவு எதிர்ப்புகளுக்கு நடுவிலும், சீடர்கள் கலக்கமுறவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். ”சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்”. அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க எவ்வளவோ இன்னல்களை அனுபவித்தபோதிலும், மிகுந்த மகிழ்ச்சியோ வாழ்ந்தனர். இறைவன் அவர்களோ இருக்கிறார் என்கிற ஆழமான விசுவாசம் தான், அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியைத்...