Category: Daily Manna

ஆண்டவரே உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூறும்

திருப்பாடல் 106: 19 – 20, 21 – 22, 23 ”ஆண்டவரே உமது இரக்கத்திற்கு ஏற்ப என்னை நினைவுகூறும்” இந்த திருப்பாடல் “அல்லேலூயா” என்கிற வார்த்தையோடு தொடங்கி, அதே வார்த்தையோடு முடிவுறுகிறது. அதாவது, கடவுள் போற்றப்படுவாராக என்பது, இதனுடைய பொருளாக இருக்கிறது. புகழ்ச்சிக்குரிய இந்த இரண்டு வார்த்தைகளுக்கு இடையே, இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்கள், கடவுளின் பொறுமை தெளிவாக விளக்கப்படுகிறது. மனிதர்களின் பாவங்களும், கடவுளின் அளவுகடந்த இரக்கமும் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருந்தனர். நன்மைகளைப் பெற்றதற்கு மாறாக, அவர்கள் கடவுளுக்கு எதிராக பாவச்செயல்களில் ஈடுபட்டனர். படைத்தவரை மறந்தனர். படைக்கப்பட்ட பொருளை வணங்க ஆரம்பித்தனர். அதாவது, உண்மையான தெய்வத்தை விட்டுவிட்டு, தாங்களாகவே படைத்த தெய்வங்களை வணங்க ஆரம்பித்தனர். இறைவன் எகிப்திலிருந்து அவர்களை விடுவித்த அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்துவிட்டு, தங்கள் மனம்போன போக்கில் வாழ ஆரம்பித்தனர். ஆனாலும், கடவுள் அவர்கள் மட்டில் பொறுமையாக...

ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்

திருப்பாடல் 46: 1 – 2, 4 – 5, 7 – 8 ”ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்” இறைவன் தான் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருக்கிறவர். அவரின்றி அணுவும் அசையாது. எனவே, வாழ்க்கையில் பயம் இல்லை, என்கிற ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள் தான், இன்றைய திருப்பாடல் நமக்குத்தரக்கூடிய வார்த்தைகள். கடவுள் எல்லா நேரத்திலும், தான் தேர்ந்து கொண்ட மக்களோடு இருக்கிறார். குறிப்பாக, அவர்களது துன்பநேரத்தில் அவர்களோடு தங்கியிருக்கிறார். இயற்கையின் சீற்றங்கள் எவ்வளவு தான் பயமுறுத்தினாலும், கடவுளின் பாதுகாப்பு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. எனவே, எவற்றிற்கும் பயப்படுவது கிடையாது. கடவுள் தான் எல்லாமுமாக இருக்கிறார். எதிரிகளிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார். எதிரிகளை வெற்றி பெறச் செய்கிறார். எல்லாவித நெருக்கடிகளிலிருந்தும் ஆண்டவர், கடவுளின் பிள்ளைகளை விடுவிக்கிறார். வாழ்க்கையில் எது நடந்தாலும், நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆண்டவர் உடன் இருப்பதால், எத்தீங்கும் நெருங்கப்போவதில்லை. வாழ்க்கையில் பலவீனத்தில் தவறுகள் செய்தாலும், கடவுள் மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார். இன்றைய...

ஆண்டவரது கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்

திருப்பாடல் 30: 1, 3, 4 – 5, 10 – 11, 12 ”ஆண்டவரது கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்” கடவுள் நல்லவர். கடவுள் பொறுமையுள்ளவர். கடவுள் மன்னிப்பு வழங்குகிறவர். இப்படி பல நல்ல பண்புகளை கடவுளுக்கு நாம் கொடுக்கிறபோது, கடவுளால் எப்படி தீமை செய்கிறவர்களைத் தண்டிக்க முடியும்? கடவுள் ஏன் தண்டிக்கிறார்? இது போன்ற கேள்விகள் கடவுளின் பண்புகளைக் கேள்விக்குள்ளாக்கும். கடவுளின் அன்பையும், கருணையையும் முழுமையாக உணர்ந்த, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உணர்ந்த திருப்பாடல் ஆசிரியர் அதற்கான பதிலைத்தருகிறார். கடவுள் கோபப்படக்கூடியவர் தான். எப்போது நாம் தவறு செய்கிறோமோ, எப்போது இந்த இயற்கையைச் சின்னாபின்னமாக்கி, இந்த வாழ்வியல் நெறிகளை, இயற்கையின் இயல்புகளைச் சிதைக்கிறோமோ, அப்போது, பொங்கி எழக்கூடியவர். வலியவன் எளியவனை அடக்கி ஆள நினைக்கிறபோது, அவர்களை அடிமைப்படுத்த நினைக்கிறபோது, அதனை தட்டிக்கேட்கிறவர் தான். ஆனாலும், கடவுளின் கோபம் நம்மை அழிக்க நினைப்பது அல்ல, கண்டித்து திருத்துவது மட்டுமே. நாம்...

மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்

இனிய சுவையுடன் கனிந்த கனி இருக்க கள்ளிக் காயைக் கடிக்கும் கடின மனத்தினர் சிலர். ஊரெல்லாம் ஒளி வெள்ளமாக இருந்தாலும் சிலர் ஒதுங்கியே இருப்பர். ஊரெல்லாம் ஒன்று கூடி தேரிளுக்கும். ஆனால் அவர்கள் மட்டும் வேரெதையோ நோட்டமிட்டிருப்பார்கள். கலகலப்பாக கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு சிலர் கல்லாகி மூலையில் முடங்கிக்கிடப்பர். இப்படி இயல்பானதை விட்டு விட்டு,முரணான முறையில் செயல்படும்போது அவனில் ஏதோ ஒரு குறை உள்ளது என்று பொருள். ஒளியில் வந்தால் தன் அழுக்கு, அசிங்கம், குறை. குற்றம் தனக்குத் தெறிய வரும். பிறர் தெறிய நேரிடும். தன்போக்கினை மாற்ற வேண்டும் என்ற தயக்கம். கோயிலுக்கு வந்தால் தன் பாவ வாழ்வு தனக்குத் தெறிய வரும். மனமாற்ற வாழ்வுக்கு தயாராக வேண்டுமே என்ற பயம். இருளில் இருப்பது இப்படிப்பட்டவர்களுக்கு வசதியானது; சுகமானது; சௌகரியமானது. ஒளிக்குள் வருவதற்கு உடலை வளைக்க வேண்டும். உள்ளத்தை ஒடுக்கவேண்டும். நாலுபேரோடு கூடி கலகலப்பாக நல்லதைச் செய்ய...

செபிக்கும் மனநிலை

பரிசேயர் மற்றும் வரி தண்டுபவரின் செபத்தைப்பற்றிய ஓர் ஆய்வை இயேசு மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சி வாயிலாக, நமது செபம் எப்படி இருக்கக்கூடாது? மற்றும் எப்படி இருக்க வேண்டும்? என்கிற செய்தியையும் அவர் நமக்குத்தருகிறார். பரிசேயன் ஆலயத்திற்குச் சென்றது செபிப்பதற்காக அல்ல, மாறாக தன்னைப்பற்றிப் புகழ்வதற்காகத்தான் என்பது அவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஒருவன் எப்படி? என்பது அவன் சொல்லித்தான் கடவுளுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. பரிசேயன் சொன்னது அனைத்தும் உண்மைதான். அவன் சொல்லாவிட்டாலும் கடவுளுக்குத் தெரியும். எனவே, நம்மைப்பற்றிப் பெருமைபாராட்டுவதில் நாம் நேரத்தைச் செலவழிக்கத் தேவையில்லை. வரிவசூலிக்கிறவர் தனது நிலையை எண்ணிப்பார்க்கிறார். தனது வாழ்வைச் சிந்தித்துப்பார்க்கிறார். தான் இதுநாள் வரை நடந்துவந்த அந்தப் பாதையை பின்னோக்கிப்பார்க்கிறார். தான் பாவி என்பதை உணர்கிறார். கடவுளுக்கேற்ற வாழ்வு தான் வாழவில்லை என்பதை அறிகிறார். தனது தவறுக்காக மனம்வருந்துகிறார். நேர்மையான முறையில் வாழ, அவர் இறைவனின் மன்னிப்பிற்காக, அருளுக்காகக் காத்திருக்கிறார். செபம் என்பது நமது வாழ்வை கடவுள் முன்னிலையில்...