Category: Daily Manna

கடவுளின் அன்பு அளவில்லாதது

கடவுள் மனிதர்களைப் படைத்தபோது, அவர்களுக்கான சுதந்திரத்தையும் கொடுத்தார். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதையும் கற்றுக்கொடுத்தார். கடவுள் ஒருபோதும், தனது எண்ணத்தை மனிதர்கள் மீது புகுத்தியது கிடையாது. அவர்களுக்கான சுதந்திரத்தில் எப்போதும் அவர் தலையிட்டதும் கிடையாது. ஆனால், மனிதன் எப்போதுமே, தனது சுதந்திரத்திரத்தைத் தவறாகத்தான் பயன்படுத்தியிருக்கிறான். பயன்படுத்திக்கொண்டிருக்கிறான். சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த, மனித இனம் இன்னும் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடுதான் இன்றைய நற்செய்தி வாசகம். இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு பரிசேயர்களையும், மறைநூல் அறிஞர்களையும் பார்த்து, அவர்களை எந்த தலைமுறையினருக்கு ஒப்பிடுவேன்? என்று ஆழ்ந்த அனுதாபத்தோடு பேசுகிறார். ஒவ்வொரு முறையும் அவர்கள் கடவுளின் திட்டத்திற்கு குறுக்கே நிற்கிறார்கள். ஒவ்வொரு முறையும் கடவுளின் அன்பையும், அவரது குரலையும் புறக்கணித்துக்கொண்டிருக்கிறார்கள். தன் கண்முன்னாலே, தான் அன்பு செய்கிறவர் தவறு செய்கிறபோது, தவறு என்று தெரிந்தும் அதைச் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறபோதுதான், அதன் வலி நமக்குத்தெரியும். கடவுளும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான்...

மன்னிக்கும் மனதைப்பெற….

பாவங்களை நாம் மூன்று வகையாகப் பார்க்கலாம். நாம் கடவுளுக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்கள் முதல் வகை. கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார். ஆனால், நாம் நன்றியுணர்வு இல்லாமல், அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் பலவேளைகளில், அவருக்கு எதிரான காரியங்களில் இறங்கியிருக்கிறோம். அவை கடவுளுக்கு எதிரான பாவங்கள். இரண்டாவது, நம்மோடு வாழக்கூடிய நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு எதிராக நாம் செய்யக்கூடிய பாவங்கள். நாம் மட்டும் தான் வாழ வேண்டும் என்கிற சுயநலத்தோடு நாம் செய்யக்கூடிய பாவங்களை இந்த வகையில் உள்ளடக்கலாம். மற்றவரைப்பற்றி கவலைப்படாமல், நமது வாழ்வு, நமது குடும்பம் என்ற குறுகியமனப்பான்மை நம்மை பாவத்திற்கு அழைத்துச் செல்கிறது. மூன்றாவது வகையான பாவம், மற்றவர்கள் நமக்கு எதிராகச் செய்வது. நாம் சுயநலத்தோடு இருப்பது போல, மற்றவர்களும் சுயநலத்தோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன்பொருட்டு, நமக்கு எதிராக பாவம் செய்கிறார்கள். இதிலே, நற்செய்தியில் நாம் கடவுளுக்கு எதிராக செய்யக்கூடிய பாவங்களையும், மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யக்கூடிய...

பகிர்ந்து வாழ்வோம்

”இருப்பதிலிருந்து தான், நாம் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்”. இதனை கிராமப்புறங்களில், ”சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்” என்று, நாட்டுப்புற வழக்கில் கூறுவார்கள். இன்றைய நற்செய்தியும், ”உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்” என்று, இதனை அடியொற்றி சொல்கிறது. நாம் அனைவருமே மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகப் பிறந்தவர்கள். இயற்கை அன்னையைப் பார்த்தால் அந்த உண்மை நமக்குத் தெரியவரும். அருவி, மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்துமே மற்றவருக்குக் கொடுப்பத்தில் நிறைவைப் பெறுகிறது. எந்த மரமும் அதன் கனியை, தானே உண்பதில்லை. பறவைகளும், விலங்குகளும் மனிதர்களும் பயன்பெறுவதற்காகவே அதைக் கொடுக்கிறது. மனிதர்களும் இயற்கை அன்னையின் பிள்ளைகள் தான். அவர்களும் அன்னையைப்போல தங்களின் வாழ்வில் மற்றவர்களுக்குக் கொடுத்து, அதில் நிறைவைக்காண அழைக்கப்படுகிறார்கள். எனவே, நாமும் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகவே, கொடுத்து வாழ்வதற்காகவே அழைக்கப்படுகிறோம். இன்றை நற்செய்தியும் இதனைத்தான் வேறுவார்த்தைகளில் சொல்கிறது. நாம் கொடுப்பது முதன்மையான காரியம். நாம் கொடுப்பது நல்லதாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும். எத்தனையோ மரங்கள்...

திருச்சிலுவைப் பெருவிழா

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்த சிலுவையானது சாதாரண பொருளாக அல்ல. மாறாக, தியாகத்தின் சின்னமாக, நினைவாகக் கருதப்படுகிறது. இயேசுவின் பாடுகள், அவருடைய இறப்பு மற்றும் உயிர்ப்பு தான் கிறிஸ்தவத்தின் விசுவாசத்தை உலகிற்கு கொண்டு வந்தது. எனவே தான் தூய பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (1: 17, 18) ”திருமுழுக்கு கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தலாகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப்போய்விடும். சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” என்று கூறுகிறார். நான்காம் நூற்றாண்டின் முதல் பகுதியில் திருச்சிலுவையின் பக்தி முயற்சியை நாம் காண முடிகிறது. அலெக்சாண்டிரியன் குறிப்பேடு வழங்கும் சான்றுப்படி கான்ஸ்டன்டைன் தாயான ஹெலன் (இலேனம்மாள்) அரசி தான், ஆண்டவரின் திருச்சிலுவையை செப்டம்பர் 14, 320 அன்று கண்டுபிடித்தார். அதன்பின் 13 செப்டம்பா்...

இறைவனின் வருத்தம்

இந்த உலகத்தில் கடவுள் நம்மைப் படைத்தார் என்றால், அதற்கு முழுமையான நோக்கம், நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான். இந்த உலகத்தின் படைப்புக்களில் எல்லாம் சிறந்த படைப்பாக, மனிதர்களைப் படைத்தார். அவர்களை படைப்பின் சிகரமாக உண்டாக்கினார். அவர்களுக்கு பல சுதந்திரங்களையும் கொடுத்தார். இவ்வளவு செய்தாலும், மனித இனம் தன்னைப் படைத்தவரை நன்றியோடு நினைத்துப்பார்க்கவில்லை. இன்றைய நற்செய்தியின் வெளிப்பாடு, கடவுளின் கோபம் என்பதை விட, கடவுளின் மனவருத்தம் என்பதே யதார்த்தமான நிலையாக இருக்கிறது. மனிதன் மகிழ்ச்சியாக வாழத் தேவையான அனைத்தையும் கடவுள் கொடுத்திருக்கிறார். ஆனால், மனித இனம் மகிழ்ச்சியாக இல்லை. காரணம், சுயநலம். எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல், தான் மட்டும் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற குறுகிய மனம் தான், மனிதனின் மகிழ்ச்சியற்ற நிலைக்கு காரணமாக இருக்கிறது. தான் மகிழ்ச்சியாக இல்லையென்றாலும் பரவாயில்லை. மற்றவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடக்கூடாது என்கிற எண்ணம், இன்றைய நாகரீக மனிதனின் நெஞ்சத்தில் பசுமரத்தாணி...