Category: Daily Manna

நேர்மையாளரையும், பொல்லாரையும் ஆண்டவர் சோதித்தறிகிறார்

ஒருவரை நல்லவரா? கெட்டவரா? என்று அறிவதற்கு, சோதனை செய்து பார்ப்பது மனிதர்களின் குணம். மிகப்பெரிய பொறுப்பை ஒருவரிடம் கொடுக்க விரும்பும் தலைவர், யாரிடத்தில் அதனைக் கொடுக்க விரும்புகிறாரோ, அவரை பலமுறை சோதித்திருப்பார். அந்த சோதனையில் எல்லாம், அவர் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே, அவரால் மிகப்பெரிய பொறுப்பை அவரிடம் கொடுக்கலாம் என்கிற எண்ணம் வருவதாக இருக்கும். இது மனிதர்களுக்குப் பொருந்தும் ஆனால், கடவுள் ஒருவரைச் சோதித்துப்பார்த்துதான் அறிந்து கொள்ள முடியுமா? அல்லது சோதித்து தான் அறிந்து கொள்ள வேண்டுமா? கடவுள் நேர்மையாளர்களையும், பொல்லாரையும் சோதித்து அறிகிறார் என்று திருப்பாடல் (திருப்பாடல் 11: 4, 5, 7) ஆசிரியர் சொல்கிறார். கடவுளுக்கு ஒருவரை யாரென்று தெரிய, சோதித்து அறிய வேண்டியதில்லை. அப்படியென்றால், எதற்காக கடவுள் சோதித்தறிகிறார்? என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்? கடவுள் அறிய வேண்டும் என்பதைவிட, மற்றவர்கள் ஒருவரை நேர்மையாளர் அல்லது பொல்லார் என்பதை அறிய வேண்டும் என்பதற்காக, கடவுள் அவர்களைச் சோதிக்கிறார்....

பிரிவினைகளை அகற்றுவோம்

இந்த நற்செய்திப்பகுதி(+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26) நமக்கெல்லாம் மிக முக்கியமான பகுதி. காரணம், இயேசு நமக்காகச் செபிக்கிறார். இயேசுவின் செபம் என்ன? நாமெல்லாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதுதான். எப்படி ஒன்றாய் இருக்க வேண்டும்? நாமெல்லாம் ஒன்றாய் இருப்பது சாத்தியமா? நமக்குள்ளே பல அடிப்படை வேறுபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புரிதலில், வாழ்க்கைமுறையில், பண்பாட்டில், வழிபாட்டு முறையில் என பல வேறுபாடுகள் நம் மத்தியில் இருக்கிறது. இத்தகைய வேறுபாடுகள் நமக்குள்ளாக பல பிரிவினைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பிரிவினைகளாக இருப்பவை எப்படி நம்மை ஒன்றுபடுத்த முடியும்? இயேசு நம்மை அன்பால் ஒன்றுபட செபிக்கிறார். நமக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை அவர் அறியாதவர் அல்ல. அந்த வேறுபாடுகள் ஒருவர் மற்றவர் மீதுள்ள அன்பை, மதிப்பைக் கூட்ட வேண்டுமே தவிர, குறைக்கக்கூடாது. கடவுளை நாம் அன்பு செய்தால், கடவுள் மீது நாம் நம்பிக்கை வைத்தால், கடவுளை நமது தந்தையாக ஏற்றுக்கொண்டால், ஒருபோதும் நமக்குள்ளாக இருக்கக்கூடிய...

ஆண்டவரே என் ஆற்றல்

ஒவ்வொருநாளும் நாம் உணவு உண்கிறோம். அந்த உணவு தான் நாம் இயங்குவதற்கு, செயல்களைச் செய்வதற்கு ஆற்றலைத்தருகிறது. ஒரு வாகனம் இயங்க வேண்டுமென்றால், அதில் இருக்கிற எரிபொருள் எரிக்கப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் ஆற்றலால் வாகனம் இயங்குகிறது. ஆக, ஆற்றல் என்பது நம்மை இயக்குவதாக அமைகிறது. அது உணவாக இருக்கலாம், எரிபொருளாக இருக்கலாம். எல்லாமே இயக்கத்திற்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இங்கே, ஆண்டவர் ஆசிரியரின் ஆற்றலாக இருக்கிறார் என்பதையும், ஆண்டவர் நம் ஆற்றலாக இருக்க வேண்டும் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது. ஆண்டவர் எப்படி ஒருவரின் ஆற்றலாக இருக்க முடியும்? இந்த உலகத்தில் அநீதி ஏராளமாக நடக்கிறது. அந்த அநீதியை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டு, சமரசம் செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் அதனை எதிர்க்கிறார்கள். தங்களால் இயன்ற மட்டும் எதிர்க்கிறார்கள். அதனால் பலவிதமான எதிர்ப்பையும் நம்பாதிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் சோர்ந்து போய் விடுகிறார்கள். எதற்காக நாம் மட்டும் இப்படி வாழ வேண்டும்? என்கிற...

சிலுவையிலே தான் மீட்பு உண்டு

இயேசுவைப் பொறுத்தவரையில் அவருக்கு வாழ்வின் உச்சகட்டம் சிலுவை. சிலுவையில் தான் மீட்பு, சிலுவை தான் முடிவில்லாத வாழ்வைப்பெற்றுத்தரப்போகிறது என்பதை அவர் முழுமையாக நம்பினார். யோவான் 12: 23 ல் வாசிக்கிற, “மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்கிற இறைவார்த்தை இதை வலியுறுத்துவதாக அமைகிறது. சிலுவைக்கும், மீட்புக்கும் உள்ள தொடர்பைப்பற்றி இயேசு தொடர்ச்சியாக பல இடங்களில் பேச வேண்டிய அவசியம் என்ன? அதனுடைய அர்த்தம் என்ன? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோம் என்றால், வரலாற்றிலே இடம் பிடித்திருக்கிற சரித்திர நாயகர்களுக்கு இறப்புதான் இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. சரித்திரத்தில் இடம்பெற்ற மனிதர்களில் பலர் உயிர் வாழ்ந்தபோது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. புகழ் பெறவும் இல்லை. ஆனால், அவர்கள் தழுவிய மரணம் தான் அவர்களின் பெயர்களை சரித்திரத்தில் இடம்பெறச்செய்து, அவர்களுக்கு வரலாற்றில் தனி இடத்தைப்பெற்று தந்திருக்கிறது. இயேசு இறந்தபோது கூட நூற்றுவர் தலைவன் ஒருவர் ‘உண்மையிலே இவர் இறைமகன் தான்’ என்று சொன்னதும் இதை...

இயேசுவின் மதிப்பீடுகள்

இயேசு தனது பணிவாழ்வில், சீடர்களை பயிற்றுவிப்பதில் சிறந்த ஆசானாக செயல்படுகிறார் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்கு சொல்கிறது. எப்படி? இயேசு தனது பயிற்சியை பல தளங்களாக செயல்படுத்துகிறார். அந்த வகையில், முதலில் தன்னுடைய சீடர்களுக்கு விசுவாசத்தின் அவசியத்தை விளக்குகிறார். அவர்களது விசுவாசத்தை அதிகப்படுத்த முயற்சி எடுக்கிறார். புதுமைகள் செய்கிறபோதும், மக்களிடம் போதிக்கிறபோதும், சீடர்கள் தன்னுடன் இருந்து, விசுவாசத்தை அதிகப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறார். சீடர்கள் கற்றுக்கொள்ள கடினப்பட்டபோதிலும், இன்றைய நற்செய்தியில் அவர்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டது தெளிவாகிறது. முதல் இலக்கில், தளத்தில் இயேசு வெற்றிபெறுகிறார். ஆனால், இது அடைய வேண்டிய இறுதி இலக்கு அல்ல. இன்னும் முன்னேற இலக்கு இருக்கிறது. அதை நோக்கி முன்னேற இயேசு முனைகிறார். சீடர்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டவுடன், இயேசு அடுத்த தளத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார். விசுவாசத்தோடு இருக்க வேண்டியவர்கள், எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அவர் முன்னெடுக்கிறார். விசுவாசத்தில் வாழ்கிறவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல, அது ஒரு சவாலான பணி....