Category: தேவ செய்தி

கோதுமை மணியின் மாட்சி

தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கு இயேசு சொன்ன அருமையான போதனை கோதுமை மணி உவமை. கிரேக்கர்கள் அறிவுஜீவிகள். அவர்கள் ஞானத்தைத் தேடியவர்கள். எனவே, ஞானம் நிறைந்த இயேசுவின் போதனைகளையும், அருங்குறிகளையும் கேள்விப்பட்டு அவரைக் காணவந்தார்கள். அவர்களுடைய அறிவாற்றலுக்கு ஏற்றவகையில் இயேசு அவர்களிடம் உரையாடுகிறார். கிரேக்கர்களுக்குத் தோல்வி, துன்பம் இவற்றில் நம்பிக்கை இல்லை. துன்பத்தின் வழியாக இன்பமும், வெற்றியும் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களின் அறிவாற்றலுக்கு ஒவ்வாத செய்திகள். எனவேதான், ஞானத்தை நாடும் கிரேக்கருக்கு சிலுவை மடமையாய் இருக்கிறது என்றார் பவுலடியார். பவுலைப் பொறுத்தவரையில், சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து “கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1: 22-24). அந்த ஞானத்தைத்தான் தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கும், அவர்களோடு நின்றுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் இயேசு கற்றுக்கொடுக்க முன்வந்தார். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம்...

பிளவு ஏன்?

(யோவான் 07 : 40-53) “அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது” (யோவான் 7:43) ஆம், நேற்றைய நற்செய்தியின் தொடக்கமாக இன்றைய நற்செய்தியின் சிந்தனை அமைகின்றது. அவருக்குச் சார்பாகவும் எதிராகவும் மக்களிடையே பிளவு ஏற்படுகிறது. இப்பிளவுக்குக் காரணம் இயேசுவா? உறுதியாக இல்லவே இல்லை. மக்களின் முற்சார்பு எண்ணங்களையும், அறியாமையையும், அதிகார வர்க்கத்தினர் மிகவும் சரியாக அவர்களுக்கேற்றார் போல் பயன்படுத்திக் கொள்கின்றனர். கலிலேயர்கள் என்றாலே கலகக்காரர்கள் என்ற முற்சார்பு எண்ணத்தையும், கலிலேயாவில் இயேசு தன் பணிவாழ்வின் பெரும்பகுதியை செலவழித்ததால் அவர் ஒரு கலிலேயன் என்ற முடிவுக்கு வருகின்ற அறியாமையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும். ‘கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றவில்லை’ என்ற எண்ணம் திசை திருப்புபவர்களின் திமிரையும், அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறையையும், படித்தவர்களின் முட்டாள் தனத்தையும் காட்டுகின்றது. இதே நபர்கள் தான் இன்றும் நம்மைப் போன்ற பாமர மக்களின் அறியாமையையும், முற்சார்பு எண்ணத்தையும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். கடவுளுக்கும் எல்லை...

தன்னைக் கரைக்க

மத் 1:16, 18-21,24 தவக்காலத்தில் நாம் கொண்டாடும் விழாக்களில் மிகவும் முக்கியமானது தூய வளனாரின் பெருவிழா. இத்தவக்காலத்தில் இவரை நாம் நினைவு கூர்வது இன்னும் அதிகமாக இத்தவக்காலத்தை வாழ்வாக்க எளிதாக இருக்கும். காரணம் இவர் மௌனத்தில் பேசியவர், பேசியதைக் காட்டிலும் செயலினால் அதிகம் இறைத் திருவுளத்தை நிறைவேற்றியவர். உப்பாக, ஒளியாக இருங்கள் என்று சொன்ன நம் ஆண்டவரின் வார்த்தைகளை உலகின் உப்பாக இருந்து வாழ்ந்து காட்டியவர். நேற்றைய நற்செய்தியில் ‘தீர்ப்பிடாதீர்கள்’ என்ற இறைவார்த்தையை தன் வாழ்க்கை மந்திரமாகக் கொண்டவர். உன் உள் அறைக்கு சென்று செபி என்ற இறைவார்த்தை தன்வார்த்தையாக்கியவர். இதுவரைக்கும் இத்தவக்காலத்தில் நாம் பார்த்த அனைத்து நற்செய்தியின் மதிப்பீடுகளின் மறுஉருவமே இன்றைய விழா நாயகர் தூய வளனார். தன் விருப்பு வெருப்புகளை இறைவனின் விருப்பத்திற்காக கரைத்துக் கொண்டவர். தன்னால் முடிந்தவரை நல்லவர்களின் நற்பெயருக்கு கலங்கம் வராதபடி தன்னையே கட்டி கோட்டையாகப் பார்த்துக் கொண்டவர். மொத்தத்தில் இத்தவக்காலம் நம் கண்முன் காட்டுகிற...

பதில் தொடர்கின்றது

பதில் தொடர்கின்றது பரிசேயர்களுக்கான பதில் இன்றைய நற்செய்தியிலும் தொடர்கின்றது. இயேசுவே இறைமகன் என்பதற்கான சான்றுகளைத் தனக்குத்தானே எடுத்துக்காட்டுவதோடு, மற்றவர்கள் அவருக்கு சான்று பகர்ந்தது பற்றியும் எடுத்துரைக்கின்றார். இதில் தந்தைக் கடவுளின் சான்றும், திருமுழுக்கு யோவானின் சான்றும் மிகவும் இன்றியமையாதவை. ஆனால் இச்சான்றுகள் அனைத்தும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே இருந்தன. அதனால் யூதர்களுக்குக் குறிப்பாகப் பரிசேயர்களுக்கு இயேசுவே இறைமகன் என்று கூறுவது மிகவும் கடினமாக இருந்தது. அச்சான்றுகளை அறியாதவர்கள் பலர். அறிந்தவர்களிலும் உணர்ந்தவர்கள் சிலர். இப்படியிருக்க எப்படி இயேசுவின் சான்றினை ஏற்றுக் கொள்வார்கள்? ஆனால் இயேசு தான் இறைமகன் என்பதனை தன் வார்த்தைகளால் மட்டும் காட்டவில்லை. மாறாகத் தன் செயல்களினாலும் காட்டினார். அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லை. மற்றவர்களைப் போல அவர் சொல்லிவிட்டுச் செல்லவில்லை. மாறாகத் தான் சொன்னது அனைத்தையும் செய்துவிட்டுச் சென்றார். காண்க : “பார்வையற்றோர் பார்க்கின்றனர், ஊனமுற்றோர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், காது கேளாதோர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர்,...

திட்டமிட்டு இழக்காதே!

(யோவான் 05 : 17-30) ஓய்வு நாளன்று இயேசு குணமளித்ததனால் (நேற்றைய நற்செய்தி) பரிசேயர்கள் அவர் மீது கோபம் கொண்டு பொங்கி எழுகின்றனர். இன்றைய நற்செய்தி, அப்பரிசேயர்க்குப் பதிலாகவும், இன்னும் தெளிவில்லாமல் நிலைவாழ்வினைப் பற்றி கேள்வி கேட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கும் நல்லதொரு புரிதலாகவும் அமைகிறது. புடிக்கும் காலத்திலே எல்லோர்க்கும் கணிதப் பாடம் எளிதாக வராது அல்லவா? அப்பொழுது எம் கணித ஆசிரியர் கூறுவார், நான் கணிதப்பாடத்தை எளிதாக்கி உங்கள் கைகளில் கொடுத்துவிட்டேன். இனி நீங்களே தேர்ச்சி பெறக் கூடாது என்று நினைத்தால் கூட உங்களால் ஆகமுடியாது. ஆனால் தேர்ச்சி பெறக் கூடாது என்று திட்டம் போட்டு செயல்பட்டால் மட்டுமே, உங்களால் தேர்ச்சி பெறாமலிருக்க முடியும் என்பார். இதைப் போன்று தான் நம் இயேசு “நிலைவாழ்வு” என்ற சூத்திரத்தை மிக எளிதாக்கி, நம் கண்முன், நம் கைகளில் வைத்துவிட்டார். “என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புவோர் நிலைவாழ்வினைப் பெற்றுக் கொள்வர்”....