Category: தேவ செய்தி

விடாமல் விடாப்பிடியாக விரட்டு…

லூக்கா 11:5-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எதையும் பெற வேண்டும் என்றால் தொடங்கிய முயற்சியை விடாமல் விடாப்பிடியாகத் தொடா்ந்து செய்யும் போது தான் வெற்றி என்பது கிடைக்கும். இறைவனிடம் இருந்து நாம் நம்முடைய வரங்களை பெற வேண்டும் என்றாலும் தொடர்ந்து விடாமல் விடாப்பிடியாக கேட்க வேண்டும். அதுதான் வரங்களை வாரி வழங்குகிறது. ஆகவே இன்றைய நாள் நாம் தொடங்குகிற முயற்சி, செயல் எல்லாம் தொடா்ந்து விடாமல் விறுவிறுப்பாக போகட்டும் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். அதை இரண்டு விதத்தில் நாம் ஆர்வமாக செய்யலாம். 1. முடியும் எதையும் செய்ய நம்மால் முடியும் என்ற உயா்ந்த எண்ணம் இருந்தாலே எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடிகிறது. எதையும் பின்வாங்காமல்...

ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்லுங்க…

லூக்கா 11:1-4 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கற்றுக் கொடுத்த ஜெபம் மிகவும் வல்லமை வாய்ந்தது. அந்த ஜெபம் நம் நாடி நரம்பு அனைத்திலும் துடிப்பை உருவாக்க கூடியது. உயிரிழந்த செல்களுக்கு புத்துயிர் அளிக்க வல்லது. நம் ஆன்மாவிற்கான ஆனந்த ராகம் அது. அதை உணா்ந்து தினமும் ஜெபிக்கும் போது எப்பொதும் வெற்றி உண்டு என்ற அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அடிக்கடி இந்த ஜெபத்தை சொல்வது மிக நல்லது. அடிக்கடி சொல்ல வாய்ப்பு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு மூன்று முறை சொல்வது அந்த நாளை இனிய நாளாக்கும். 1. காலை சொல்லுங்க… காலை எழுந்ததும் ஆண்டவரை இந்த ஜெபத்தின் வழியாக...

தேவையானது ஒன்றே.. இது தெரியுமா?

லூக்கா 10:38-42 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பலவற்றை தேடி அதிவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்திற்கு நன்றி சொல்லி விடைபெறுவதற்குள் பலவற்றை அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று மிகவும் பரபரப்பாக, படபடப்பாக அலைகிறோம். இப்படி அலைந்ததனால் அடைந்த இலாபம் என்ன? பெருநஷ்டம் தான் மிஞ்சியது. பெரும்கவலை தான் கிடைத்தது. வாழ்க்கையில் இலாபம் கிடைக்க வேண்டுமென்றால் ஒன்றே ஒன்றே போதும் என்கிறார் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. பொறுமை இருந்தால் போதும் வாழ்க்கையில் இலாபம் பொங்கி பொங்கி வரும். கலங்க வேண்டியதில்லை. இந்த பொறுமை நமக்கு பல நேரங்களில் இருப்பதில்லை. பொறுமையே நம் வாழ்விற்கு பெருமையைக் கொண்டு வருகிறது. பொறுமையை இரண்டு...

படைகளின் ஆண்டவரே! மீண்டும் வாரும்

திருப்பாடல் 80: 8 – 11, 12 – 13, 14 – 15, 18 – 19 ”படைகளின் ஆண்டவரே! மீண்டும் வாரும்” திருப்பாடல்களில் பெரும்பான்மையான பாடல்கள் விண்ணப்பங்களாகவும், தங்களது துன்பத்தை வெளிப்படுத்தும் பாடலாகவும் அமைந்துள்ளன. இந்த பாடலும் இதிலிருந்து விதிவிலக்கான பாடல் அல்ல. ஆண்டவரின் உதவியைக் கேட்கிற ஒரு மனிதரின் கேவல் குரலாக இந்த பாடல் அமைந்துள்ளது. இது மன்னிப்பாகவும் வெளிப்படுகிறது. இஸ்ரயேலின் ஆண்டவர் அவர்களுக்கு பலவிதமான நன்மைகளைச் செய்தார். அந்த நன்மைகளை எல்லாம் மறந்துவிட்டு, இஸ்ரயேல் தவறான பாதைக்குச் சென்றது. அதற்கான பலன்களை மிக விரைவிலேயே பெற்றுக்கொண்டது. உண்மை உரைத்தவுடன், வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கச்செய்கிறது. அதனுடைய விளைவு: மீண்டும் கடவுளிடம் திரும்பி, திருந்தி வர வேண்டும் என்கிற எண்ணம். அந்த எண்ணத்தைத்தான் இங்கு நாம் பார்க்கிறோம். கடவுள் செய்த நன்மைகளையெல்லாம் மறந்தவிட்டதற்கான் தண்டனையாக இப்போதுள்ள நிலையை, ஆசிரியர் பார்க்கிறார். இப்போது இருக்கிற மோசமான நிலைக்கு தாங்கள் முழுக்க...

உங்கள் பெயர் இருக்கிறதா?

லூக்கா 10:17-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நமது பெயர் திருமண அட்டையில் வர வேண்டும், திருவிழா அழைப்பிதழில் வர வேண்டும் மற்றும் மேடையில் நம் பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது உண்டு. அதுவெல்லாம் உயர்வல்ல. நம் பெயர் விண்ணத்தில் இருக்கிறதா? அதுதான் மிக முக்கியம். இன்றைய நற்செய்தி வாசகம் விண்ணகத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துப் பாருங்கள். பெயர் இல்லையென்றால் எழுத முயற்சி எடுங்கள் என நம்மோடு பதமாக பேசுகிறது. மண்ணகத்தில் நாம் செய்யும் சிறப்புமிக்க செயல்கள் தான் விண்ணத்தில் நம் பெயர்கள் எழுதப்பட மிகச் சிறந்த காரணிகளாக உள்ளன. மண்ணகத்தில் நாம் இரண்டு செயல்களின் மீது கவனம் செலுத்தினால் அதுதான்...