Category: தேவ செய்தி

பலருக்காக ஒருவர்

யோவான் 11: 45-57 நேற்றைய நற்செய்தியின் இறுதியிலும், இன்றைய நற்செய்தியின் தொடக்கத்திலும் முக்கியமான ஒரு ஒற்றுமை இருப்பதை நம்மால் காண முடிகிறது. அதாவது அதிகார வர்க்கத்தினரான தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவரை எதிர்த்தாலும் சாதாரண பாட்டாளி மக்கள் அவரை நம்ப துவங்கினர். எளிய மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான் கயப்பா, “இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்றார். இங்கே அவர் யூத இனமக்களையும், அவரின் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கே இவ்வாறு கூறினார். ஆனால் உண்மையிலேயே இது தான் கிறிஸ்துவின் வருகையின் நோக்கம். இதை நாம் பல இடங்களில் காணலாம். குறிப்பாக 3: 16 ல் அவர் இவ்வுலகிற்கு வந்ததே இறப்பதற்காக, அந்த இறப்பு நம்மை மீட்பதற்காகவே. எப்படி ஓர் ஆதாமினால் பாவம் இம்மண்ணுலகில் நுழைந்ததோ. இரண்டாம் ஆதாமினால் பாவம் முழுவதும் அகற்றப்பட்டது. எப்படி ஒரு மரத்தினால் முதல்...

கடவுள் எங்கோ இல்லை

யோவான் 10.31-42 பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இயேசு தன் பணியைச் செய்து வந்தார். “இதோ இக்குழந்தை இஸ்ராயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என்ற இறைவாக்கினர் சிமியோனின் வாக்கு (லூக் 2:24) செயல்பட தொடங்கியது. தன் சொந்த ஊரிலேயே அவருக்கு எதிர்ப்பு, அவரைக்கல்லால் எரிந்து கொல்லவும், கேள்விகள் கேட்டு அவமானப்படுத்தவும், வாதம் புரிந்து தோற்கடிக்கவும், சூழ்ச்சிகள் செய்து உரோமையர்களிடம் மாட்டி விடவும் பல முயற்சிகள். இவை அனைத்திற்குமான காரணம் அவர் கடவுளை தந்தை என்று அழைத்தும், என்னைக் காண்கின்றவன் தந்தையைக் காணலாம் என்றும், தந்தையின் செயலினையே நான் செய்கிறேன் என்றும், கடவுளை நம்மோடு ஐக்கியப்படுத்தியதற்காகவே, கடவுளை நம் மத்தியில் கொண்டு வந்ததற்காகவே, அவரை மத்தியில் விட்டு அனைவரும் ஏளனம் செய்தனர். யூதர்களைப் பொறுத்தவரை கடவுளை எங்கோ இருப்பவராகவேப் பார்த்தனர். அவரை தம்மில் ஒருவராக அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர் இப்படி, அப்படியென்று கடவுளுக்கு வரையறைக் கொடுத்தார்கள்....

வார்த்தையே வாழ்வு

யோவான் 8: 51-59 உண்மைக்கு சான்று கூறவே இயேசு வந்தார். உண்மையைக் கூறியதால் அவரைச் சிலுவையில் அறைந்துக் கொன்றார்கள். “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்கு சொல்லுகிறேன்” என்றதால் அவர்மேல் கல் எறிய கற்களை எடுத்தார்கள் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம். இயேசுவின் இந்த வார்த்தையை யூதர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மத்தேயு இயேசுவின் மூதாதையர் பட்டியலை ஆதாமில் முடிக்கிறார் (ஏறுவரிசை) ஆனால் யோவான் நற்செய்தியாளரோ இயேசுவின் உடனிருப்பை இவ்வுலகப்படைப்பின் தொடக்கத்திலிருந்தே இருப்பதை நம் கண்முன் கொண்டுவருகிறார். “தொடக்கத்தில் வாக்கு இருந்தது அவ்வாக்கு கடவுளோடு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது,” (யோவான் 1:1) இந்த வார்த்தை மனிதனாகிப் பேசிய பொழுது வல்லமையுள்ள வாழ்வளிக்கும் வார்த்தையாகவே இருந்தது. இதையே இயேசு “என் வார்த்தையைக் கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்” என்கிறார். நாம் வார்த்தையானக் கடவுளை வாழ்வாக்குவோம். அவரினைப்பற்றி இன்னும் அதிகம் அறிய, உணர இறைவார்த்தையை தினமும் வாசிப்போம். நம்முடைய அனைத்துப் பிரச்சனைகளிலும்...

உண்மையா?

யோவான் 8: 31-42 “உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” -இதை இன்றைய தேர்தல் நெருங்குகிற சூழலில் சொன்னால் கண்டிப்பாக அனைவரும் சிரித்துவிடுவர். “உண்மையா அது என்ன” என்று பிலாத்து கேட்டதுப் போலதான் நாம் அனைவரும் கேட்போம். காரணம் யார் அதிகமாக பொய்க்கூறி ஏமாற்றுவார்களோ அவர்களே சிறந்தவர்கள், தலைவர்கள் ஆகுகிறார்கள். காரணம் இன்றைய உலகம் உண்மைப் பேசுபவர்களைவிட பொய் பேசுபவர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறது. மசாலா தடவிப் பேசுபவர்களை உடனடியாக நம்புகிறது. பல வருடங்களாக மாற்றாத, பொய்யான தேர்வு வரைவினை இன்றுவரை கட்சிகள் வெளியிடுவது நாம் எவ்வளவு பொய்யானாலும் நம்புவோம் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். உண்மை ஊனமாகி விட்டது இவ்வுலகினில். ஆனால் இவ்வுலகில் இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருப்பவன் உண்மையை உணர்கின்றான். அது அவனுக்கு விடுதலை அளிக்கும், எதையும் தனது இயல்பான நாட்டத்தின் வழியே, செய்ய வேண்டியதை மனத்திடத்துடன் செய்வதே உண்மையான விடுதலையாகும். அத்தகைய உரிமை வாழ்வுக்கே இயேசு நம்மை அழைக்கிறார். அதையம்...

தாழ்த்தினால் உணர்வாய்

யோவான் 8: 21-30 கடவுளுக்கும் மோசேவுக்குமான உரையாடலில் மோசேவின் கேள்விக்கு கடவுளின் பதில் கிடைக்கிறது. காண்க வி.ப 3:13-14, “கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நாமே” என்றார். இன்றைய நற்செய்தியில் அவர்களின் கேள்விக்கு இயேசு ‘இருக்கிறவர் நாமே’ என்ற பதிலினைக் கொடுக்கின்றார். கடவுளின் வார்த்தையை மோசே முழுவதுமாக புரிந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை, ஆனால் அவரின் வார்த்தை அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உந்தி தள்ளியது. அவரும் தன்னிடம் பேசிய அக்குரலினை நம்பி ஏற்றுக் கொண்டார். ஆனால் இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் குரலினை மட்டும் அவர்கள் கேட்கவில்லை, மாறாக, அவரையும் அவரின் ஒவ்வொரு வல்ல செயல்களையும் தன் கண்களால் பார்த்தும் உணர்ந்தும் கொண்டவர்கள,; அவரை நம்ப தயங்கி, ‘இருக்கின்றவராக இருக்கிறவர் நானே’ என்பதினை இன்னும் எளிதாக்கி ‘நானே’ என்று ஏழுமுறை எடுத்துக்காட்டோடு பேசியவரின் (நேற்றைய சிந்தனையைப் பார்க்கவும்) வார்த்தைகள் இவர்களின் அதிமேதாவித்தனத்துக்கு புரியவில்லை. புரிந்தாலும் தன்னோடு பார்த்து பழகியவர்கள் என்பதால் அவர்களின்...