Category: தேவ செய்தி

ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை கடவுள் நினைவுகூர்ந்தார்

திருப்பாடல் 105: 6, 7, 8, 9, 42 – 43 கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு உண்மையாக இருக்கிறவர். அவர்களோடு உடன் பயணிக்கிறவர். அதற்கு அடித்தளமாக இருப்பது கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதி. கடவுள் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறார்? யாரோடு வாக்குறுதி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்? தொடக்கநூல் 12 வது அதிகாரத்தில் கடவுள் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கையை வாசிக்கிறோம்: ”உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன். நீயே ஆசியா விளங்குவாய்”. ஆக, கடவுள் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்து கொண்டு, இந்த உலகத்திற்கு அவரிலிருந்து தோன்றுகிற இனம் ஆசீர்வாதமாக இருக்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். கடவுள் கொடுத்த வாக்குறுதிக்கு பிரமாணிக்கமாய் இருக்கிறார். அவரது வாக்குறுதியின்படியே அவர் இஸ்ரயேல் மக்களை வழிநடத்துகிறார். அவர்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்கிறார். அவர்களுக்கு நாட்டை வழங்குகிறார். எதிரிகளை அடிபணியச் செய்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அவரை புறக்கணிக்கிறார்கள். அவரை உதாசீனப்படுத்துகிறார்கள்....

மகிழ்ச்சியும் இரக்கமுமே நற்செய்தி

தூய லூக்கா நற்செய்தியாளர் திருவிழா லூக்கா 10:1-9 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் நற்செய்தியாளர் தூய லூக்கா திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிரியாவின் அந்தியோக்கு நகரில் பிறந்த லூக்கா, ஒரு மருத்துவர். ஓவியரும் கூட என்று வரலாறு கூறுகிறது. புறவினத்தாராகிய லூக்கா, அப்போஸ்தலர் பவுலுடன் இணைந்து உழைத்தார். “அன்புமிக்க மருத்துவர் லூக்கா” என்று பவுல் இவரைக் குறிப்பிடுகிறார். நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவின் பணிவாழ்வை இறையரசுப் போதனையை மிகவும் சிறப்பான விதத்தில் வடித்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் தூய லூக்காவின் நற்செய்தியானது மகிழ்வின் நற்செய்தியாக இரக்கத்தின் நற்செய்தியாக விளங்குவதை பார்க்கின்றோம். தூய லூக்கா இயேசுவைக் கனிவுள்ளவராக இரக்கமுள்ளவராக எல்லோருக்கும் வாழ்வளிப்பவராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கிரேக்க குலத்தைச் சார்ந்தவரான தூய லூக்கா சிரியாவில்...

பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு

திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, (7) வாழ்வின் இன்ப துன்ப வேளை, நெருக்கடி என எது வந்தாலும், ஆண்டவரை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டும் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இங்கு தாவீது அரசரின் அனுபவம் வெளிப்படுகிறது. அந்த அனுபவம் இனிமையானது அல்ல, கசப்பானது. அவர் மனிதர்களை நம்பினார். அதிகாரத்தை நம்பினார். தன்னால் எதையும் செய்ய முடியும் என்கிற பலத்தில் நம்பினார். அதற்கான விளைவை அவர் சந்தித்தார். அந்த அனுபவம் அவரை மற்றவர்களுக்கு பாடம் கற்றுத்தருகிற வகையில் அமைந்திருக்கிறது. அதுதான் இன்றைய திருப்பாடல். மனிதர்களாகிய நாம் யார் மீது நமது நம்பிக்கை வைக்கிறோம்? நாம் பணக்காரர்களாக இருந்தால், பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கிறோம், பணத்தின் மீது நம்முடைய நம்பிக்கையை வைக்கிறோம். நாம் அதிகாரத்தில் இருக்கிறபோது, அதிகாரத்தால் என்னால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். சமுதாயத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்தால்,...

போதனையும், வாழ்வும்

அடுத்தவர்கள் மீது சுமைகளைச் சுமத்துகிற மனிதர்கள் இந்த உலகில் ஏராளம். தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை, சோம்பேறித்தனத்தின் பொருட்டு செய்யாமல், அடுத்தவர்களை ஏவுகிற வேலையைச் செய்கிறவர்களை நாம், அன்றாட உலகில் பார்க்கலாம். அத்தகைய மனிதர்களைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தியும் பேசுகிறது. திருச்சட்ட அறிஞர்களைப்பார்த்து இயேசு இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். திருச்சட்ட அறிஞர்கள் சட்டத்திற்கு விளக்கம் கொடுக்கிறவர்கள். அவர்கள் மக்களுக்கு சட்டங்களை விளக்கிக்கூறுகிறவர்கள். எதையெல்லாம் பின்பற்ற வேண்டும்? எதையெல்லாம் பின்பற்றக்கூடாது? என்று, மக்களுக்கு அறிவுறுத்துகிறவர்கள். மக்களுக்கு சட்டங்களைப் பின்பற்றச் சொல்கிற இவர்கள், தாங்கள் சொல்பவற்றை ஒருபோதும் பின்பற்றுவது கிடையாது. ஆனால், மக்கள் பின்பற்றவில்லை என்றால், அதற்கான தண்டனையைச் சுட்டிக்காட்டி, அவர்களின் மீது, தாங்க முடியாத சுமைகளைச் சுமத்திக்கொண்டிருந்தார்கள். தாங்களோ, சட்டங்களை மதிப்பதை ஒரு பொருட்டாக எண்ணியது இல்லை. இந்த வழக்கத்தை இயேசு எதிர்க்கிறார். கண்டிக்கிறார். நமது வாழ்விலும் கூட, மற்றவர்களுக்கு பலவற்றைப் போதிக்கிற நாம், அவர்களை இறைவன்பால் கட்டியெழுப்புவதற்கு பல திட்டங்களைத் தீட்டக்கூடிய...

வானங்கள் இறைவனின் மாட்சியை வெளிப்படுத்துகின்றன

திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4, (1அ) கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் என்பது நம்முடைய நம்பிக்கை. இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் பார்க்கிறபோது, பலவிதமான அறிவியல் வாதங்கள் நம் முன்னால் வைக்கப்படுகிறது. ஒரு செல் உயிரிலிருந்து மனித இனம் உருவானது என்று சொல்லப்படுகிறது. பரிணாம வளர்ச்சி தான் அடிப்படை என்கிற கருத்து வைக்கப்படுகிறது. கோள்கள் வெடித்துச் சிதறியதில் தற்செயலாக உயிரினங்கள் தோன்றின என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இப்படி இந்த உலகம் தோன்றியதற்கு பலவிதமான வாதங்களை அறிவியல் உலகம் நம் முன்னால் வைக்கிறது. ஆனால், விசுவாசிகளுக்கு, கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பது ஆதாரப்பூர்வமான உண்மை. விவிலியத்தின் தொடக்கநூலில் நாம் பார்க்கிறோம், கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார். தொடக்கநூலில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதையும் நாம் அறியாதவர்கள் அல்ல. விவிலியத்தை அறிவியல்பூர்வமாக ஆராய முற்படுகிறபோது, முரண்பாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், விவிலியத்தை எழுதிய...