Category: தேவ செய்தி

பெரியவர் தகுதி: பந்தாவா? பணியா?

மத்தேயு 23:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் இத்திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “வெட்டி பந்தா வேஸ்ட்” என்பது தொலைக்காட்சியில் நாம் பார்த்த ஒரு விளம்பரம். பந்தா செய்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வர முடியாது. செல்வாக்கு நிரம்பிய பெரிய ஆளாகவும் அவர்கள் மாற முடியாது. பின் யார்தான் செல்வாக்கு படைத்த பெரிய மனிதராக மாற முடியும். அதை நற்செய்தி வாசகம் நறுக்கென சொல்கிறது. பணி செய்கிறவர்களே விண்ணரசில் பெரியவராக கருதப்படுவார். அவர்கள் என்றும் அழியாமல் இருப்பார்கள். அவர்கள் பலர் மத்தியிலும் மனங்களிலும் வாழ்வார்கள். அவர்களின் செல்வாக்கு அவர்கள் சென்றாலும் செல்லாது. இந்த பணியில் இவர்கள் செய்யக் கூடாதவைகள் இரண்டு 1. தங்களை உயர்த்தக் கூடாது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருபோதும் தங்களை உயர்த்திக்...

புனித பர்த்தலொமேயு திருவிழா

இதைவிட பெரியவற்றைக் காண்பீர்கள்… யோவான் 1:45-51 இறையேசுவில் இனியவா்களே! தூய பர்த்தலொமேயு திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் மேலும் நீயே ஆசியாக விளங்குவாய் போன்ற ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கும்போது நம் அகம் குளிர்கிறது. உடல்முழுவதும் ஊக்கமருந்து செலுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அந்த வார்த்தை, “இதைவிட பெரியவற்றைக் காண்பீர்” இது புனித பர்த்தலமேயுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதமான வார்த்தை. இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பெறலாமா? கண்டிப்பாக பெறலாம். அதற்காக தூய பர்த்திலொமேயு எடுத்த இரண்டு முயற்சிகளை நாமும் எடுக்க வேண்டியதிருக்கிறது. முயற்சி 1: அவரோடு அமர்ந்தார் ஒரு சீடன் தன் குருவோடு அமர்ந்து அவர்...

திருவிருந்துக்கு தினமும் செல்கிறீர்களா?

மத்தேயு 22:1-14 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் இத்திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உடலுக்கு தினமும் உணவு உண்கிறோம். மூன்று வேளை உணவு உண்கிறோம். ஏதாவது நோய் என்றால் மருத்துவரை சந்திக்கிறோம். இப்படி உடலை மிகவும் கவனமாய் கவனிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் உடலைக் கவனிக்கிற நீங்கள் ஆன்மாவை கவனித்தீர்களா? ஆன்மாவிற்கான உணவு வழங்கினீர்களா? என்ற கேள்விகளோடு வருகிறது. திருமண விருந்து என்பது திருவிருந்து திருமண விருந்தாகிய திருவிருந்துக்கு நாம் எல்லோருமே அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நம்மில் பலர் பல சாக்குப்போக்குகளைக் கூறுகிறோம். கடவுள்தான் 24 மணிநேரத்தை கொடுத்தது அவருக்கு ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் கொடுக்க நம்மால் இயலவில்லை. பெரும்பாலும் வார திருப்பலிக்கு வருவதில்லை. இது சரியா? திருத்தலாமா நம்மை. தினமும் ஆன்மாவிற்கு...

அதிஷ்ட தேவதை உங்கள் கதவைத் தட்டட்டும்…

மத்தேயு 20:1-16 இறையேசுவில் இனியவா்களே! பெருமகிழ்வோடு இந்த நாளை கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். எனக்கு மட்டும் அதிஷ்டமே கிடையாது என புலம்புவோர் நம்மிலர் பலர் இருக்கின்றனர். இவர்கள் கடைசி வரை புலம்பிக்கொண்டே தான் இருப்பார்களே தவிர, அதிஷ்ட தேவதை கதவைத் தட்ட என்ன செய்ய வேண்டும். என்ன முயற்சி எடுக்க வேண்டும் என்பதை ஒருபோதும் நினைப்பதே இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல இரண்டு யோசனையை வழங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அது என்ன யோசனைகள்? தங்கள் வேலையைப் மட்டும் பார்க்க வேண்டும் நமக்கு பிறருடைய வேலையைப் பார்ப்பதே மிகவும் பழக்கமாகிவிட்டது. இப்படிப்பட்ட நாம் எனக்கு லக்கே இல்லை என சொல்வது நியாயம் தான். ஏனென்றால் என் வேலையின் வளர்ச்சிக்காக நான் நினைக்காமல், உழைக்காமல் அடுத்தவர் வேலையில்...

ஆட்சியைப் பிடிக்கனுமா? அரியணை வேண்டுமா?

மத்தேயு 19:23-30 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆட்சி, அரியணை இந்த இரண்டு வார்த்தைகளைக் கேட்கும்போதே நம் மனதிற்குள்ளே மகிழ்ச்சி ஊறுகிறது. எப்போது இவைகள் நமக்கு கிடைக்கும் என்ற ஏக்கம் அதிகமாகவே உள்ளது. இன்றைய நற்செய்தி வாசகம் இந்த ஏக்கத்தைப் போக்கி வைக்கிறது. பேதுரு, ஆண்டவர் இயேசுவைப் பார்த்து நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே, எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்றுக் கேட்டபோது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இரண்டு விதமான வாக்குறுதிகளை வழங்குகிறார். வாக்குறுதி 1: உங்களுக்கு விண்ணக ஆட்சி கிடைக்கும். மேலும் அந்த ஆட்சியிலே நீங்கள் அரியணையில் இருப்பீர்கள் என்கிறார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அந்த ஆட்சி நிரந்தரமான ஆட்சி. அங்கு அரியணை உண்டு. அந்த அரியணைக்கு முடிவே...